Tamil Nadu Horticulture: Livelihood for 30 families in Thiruvallur
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் பிளாக்கில் உள்ள புன்னப்பாக்கத்தில் உள்ள 30 குடும்பங்களுக்கு, இக்காடு கண்டிகையில் உள்ள அரசு நடத்தும் தோட்டக்கலைப் பண்ணை நம்பகமான வருமான ஆதாரமாக உள்ளது, COVID - 19 தொற்றுநோயின் போது ஏராளமான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
தோட்டக்கலை மற்றும் தோட்ட பயிர்கள் துறை மூலம் தோட்டக்கலை பண்ணை அமைக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதில் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு தோட்டக்கலைப் பண்ணை அமைத்துள்ளது, இந்த பண்ணை 30 குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விழங்குகிறது. இது தற்போது, 9 ஏக்கர் பரப்பளவில் விரிவடைந்து அனைத்து விவசாய வசதிகளையும் கொண்டுள்ளது. இது குறித்து அங்கு வேளை செய்வோரின் கூற்று,
பண்ணையில் பணிபுரியும் ஜெபராஜ் கூறுகையில்,
“கோவிட் நோயின் முதல் அலையின் போது நான் வேலையை இழந்தேன். நானும் எனது குடும்பமும் அரசு வழங்கும் சலுகைகளை நம்பியே இருந்தோம். தோட்டக்கலைப் பண்ணையில் ஆட்சேர்ப்பு இருப்பதாக என் பக்கத்து வீட்டுக்காரர் சொன்னதும், நான் உடனே அங்கே சேர்ந்தேன். இப்போது, நான் ஒரு நாளைக்கு 350 ரூபாய் சம்பாதிப்பதோடு ஒரு நாள் விடுமுறையும் பெறுகிறேன்."
பலர் குடும்பத்தின் ஒரே ஆதாயத்தை இழந்ததால், இந்த பண்ணை நம்பிக்கையின் ஒளியை வழங்கியுள்ளது. மற்றொரு தொழிலாளியான வி.சசி குமார் கூறுகையில்,
தந்தையை இழந்த பிறகு, தாயை கவனித்துக் கொள்ள வேலை தேடி வந்தேன். “எனது தந்தை இறந்தபோது நாங்கள் ஏற்கனவே நிதி நெருக்கடியில் இருந்தோம். 2 வருடங்களுக்கு முன் எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணையில் சேர்ந்தேன். கத்தரி, முருங்கைக்காய், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை மட்டுமே பயிரிட்டு எனது குடும்பத்தை நடத்த இது எனக்கு உதவியது. மானியத்தின் அடிப்படையில் விவசாயிகளுக்கு விளைச்சலை வழங்குகிறோம், ”
என்கிறார் சசி.
சோழவரம், மாதவரம் மற்றும் பூந்தமல்லி போன்ற அண்டை பகுதி விவசாயிகளுக்கும், இந்தப் பண்ணை உதவியுள்ளது. ஆந்திரா மற்றும் ஊத்துக்கோட்டையில் இருந்தும், இந்த பண்ணைக்கு அலங்கார செடிகள் வாங்க வருகிறார்கள்.
மேலும் படிக்க:
புத்தாண்டு பரிசாக 4% DA உயர்வு, மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள், முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
2023 புகழ்பெற்ற கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம்| TNAU: வழங்கும் 2 நாள் பயிற்சி| IYOM 2023