மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 September, 2020 9:11 PM IST

"உழவில்லையேல் உயர்வில்லை" என்பது நிதர்சனமான உண்மை. உழவுக்கு உழைப்பைத் தந்து உயர்ந்த விவசாயிகள் பலர். பழங்காலத்தில் இயற்கை விவசாயம் செயற்கைக்கு மாறி, தற்போது இயற்கையை நோக்கிப் பயணிக்கிறது. பப்பாளி சாகுபடியில் (Papaya Cultivation) உச்சம் தொட்ட இயற்கை விவசாயி உமாபதியின் நேர்காணலைக் (Interview) காண்போம்.

முதலில் தங்களின் விவசாய ஆர்வம் பற்றி கூறுங்கள்?

நான் உமாபதி. வேலூர் மாவட்டத்தை எனது பூர்விகம். எனது தந்தையிடம் இருந்து விவசாய நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். மண்ணின் மீதிருந்த அதீத அன்பு தான் என் விவசாய வாழ்க்கைக்கு அடித்தளமிட்டது. பயிர் சுழற்சி முறையில் (Crop Rotation System) வெண்டை மற்றும் பப்பாளியை பயிர் செய்து வருகிறேன்.

பப்பாளியின் விளைச்சல் பற்றி கூறுங்கள்?

எனக்கு நல்ல இலாபம் தரக்கூடியது. பப்பாளிச் செடிகளை தோட்டக்கலைத் துறையிடமிருந்து (Horticulture Department) இலவசமாக பெற்றுக் கொள்வேன். நான் குறைந்த அளவில் 50 சென்ட் நிலப்பரப்பில் தான் விவசாயம் செய்கிறேன். 6×6 அடி இடைவெளியில் பப்பாளிச் செடிகளை நடுவேன். 7 முதல் 8 மாதங்களில் 10 அடி வரை வளரும். வாரமிருமுறை பப்பாளி பழங்களை (Papaya) அறுவடை செய்து சந்தையில் மொத்த விலைக்கு விற்பேன். 2 வருடங்கள் வரை பப்பாளி மரம் பழங்களைத் தர வல்லது. வேலூர் சந்தை மட்டுமின்றி சென்னையிலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விற்பனை செய்கிறேன்.

வெண்டை இலாபகரமான பயிரா?

ஆம், வெண்டை எனக்கு அதிக இலாபம் தரக்கூடிய ஒரு குறுகிய காலப் பயிர். வெண்டை பயிரிட்ட 45 முதல் 50 நாட்களுக்குள் அறுவடைக்குத் தயாராகி விடும். அதன் பின், தினந்தினம் 1 மாதம் வரை வெண்டையை அறுவடை (Harvest) செய்து மொத்த விலைக்கு விற்பேன். 1 மாதத்திற்கு பின் ஒன்றுவிட்டு ஒரு நாள் அறுவடை செய்வேன். 1 கிலோ வெண்டை ஏறக்குறைய ரூ. 30 முதல் 40 வரை விற்கிறது.

இயற்கை உரங்களை பயன்படுத்த தூண்டியது எது?

மாதந்தோறும் விவசாயிகள் சந்திப்பு கூட்டத்திற்கு செல்வேன். அங்கு விவசாயிகள் தங்களது அனுபவங்களையும், நுணுக்கங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். அப்போது பல விவசாயிகள் இயற்கை விவசாயத்தின் அவசியத்தை எடுத்துரைத்தனர். பின்பு, பல பத்திரிகைகளில் இயற்கை விவசாயம் பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டேன். அதன் பிறகே, இயற்கை விவசாயத்தில் கால்தடம் பதித்தேன். கடந்த 5 வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து, சத்தான காய்கறி பழங்களை மக்களுக்கு அளிப்பது மனம் மகிழ்வாக இருக்கிறது.

தண்ணீர் பிரச்சனை உங்களுக்கு உண்டா?

எனக்கு தண்ணீர் பிரச்சனையே இல்லை. வயலுக்கு அருகே ஒரு போர்வெல் (Bore well) உள்ளதால், எந்நேரமும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச இயலும். இது தவிர ஒரு கிணறும் உள்ளதால் தண்ணீர்ப் பஞ்சத்திற்கு இடமில்லை. பொதுவாக, 3 நாட்களுக்கு 2 முறை தண்ணீர் பாய்ச்சுவேன். தற்போது மழைக்காலம் என்பதால், மழைப் பொழிவிற்கேற்ப 10 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சுவேன்.

கால்நடைகள் ஏதேனும் வளர்ப்பது உண்டா?

என்னிடம் 6 பசு மாடுகள் மற்றும் 4 கன்றுக் குட்டிகள் உள்ளது. மாடுகளை வயலிலேயே கட்டி வைத்துள்ளேன். இதனால் மாடுகளின் சாணம் (Cow dung) உரமாக வயல்களுக்கு சென்றடைகிறது. அதுமட்டுமின்றி, தினமும் காலை மாலை இருவேளை கால்நடைகளிடமிருந்து கிடைக்கும் பாலினை (Milk) வேலூரில் உள்ள டோட்லா டைரியில் (Dodla Dairy) விற்பனை செய்கிறேன். விவசாயம் செய்து கொண்டே கால்நடைகளை வளர்ப்பது எளிதாகவும், மிகவும் பயனுள்ளதாகவும் உள்ளது. விவசாயத்தை விரும்பிச் செய்வதால் அதிலுள்ள கஷ்டங்களும், சிரமங்களும் எளிதாக உள்ளது.

கொரோனா காலத்தில் எவ்வாறான சூழ்நிலைகளை எதிர்கொண்டீர்கள்?

கொரோனா வைரஸ் (Corona Virus) பரவி வரும் நிலையில், அறுவடி செய்த காய்கறி பழங்களை விற்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் தற்போது நிலைமை சீராகி ஓரளவு நல்ல நிலையில் விற்பனையாகிறது.

சொந்த உழைப்பையும், மண்ணையும் மூலதனமாகக் கொண்டு விவசாயத்தில் இலாபம் ஈட்டும் வெற்றி நாயகன் உமாபதியின் விவசாயப் பணி சிறக்க வாழ்த்துகள்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க...

மானிய விலையில் விவசாயிகளுக்கு நெல் விதைகள் விற்பனை!!

யாரும் அறிந்திராத வேம்பின் பயன்கள் என்னவென்று தெரியுமா?

உளுந்து பயிரில்அதிக மகசூல் பெற 2% டி.ஏ.பி. கரைசல்!!

English Summary: Umapathy, a natural farmer, has reached the pinnacle of papaya farming
Published on: 01 September 2020, 09:11 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now