Central

Wednesday, 06 March 2024 03:37 PM , by: Muthukrishnan Murugan

6 lakhs for setting up modern fish shop

திருப்பத்தூர் மாவட்டத்தில் மீன் வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் (PMMSY - 2023-24 )கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மூலம் பயனடைய விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் விவரம் பின்வருமாறு-

கீழே பட்டியலிடப்பட்டுள்ள இத்திட்டத்தில் இம்மாவட்ட இலக்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்படுமாயின் பயனாளர்கள் முன்னுரிமை மற்றும் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திட்டம் மற்றும் மானிய விவரங்கள் முறையே-

புதிய மீன்வளர்ப்பு குளங்கள்:

புதிய மீன் வளர்ப்பு குளங்கள் அமைத்திட திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 0.5 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1.0 ஹெக்டேருக்கு ஆகும் செலவின தொகை ரூ.7,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ. 2,80,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ. 4,20,000/- மானியமாக வழங்கப்படும்.

நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம்:

நன்னீர் மீன்வளர்ப்பு குளங்களுக்கு உள்ளீட்டு மானியம் வழங்குதல் திட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 0.5 ஹெக்டர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் 1.0 ஹெக்டேருக்கு ஆகும் செலவின தொகை ரூ.4,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.1,60,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.2,40,000/- மானியமாக வழங்கப்படும்.

சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல்:

சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைத்தல் திட்டத்திற்கு திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஒரு (1) அலகு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.7,50,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.3,00,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.4,50,000/- மானியமாக வழங்கப்படும்.

வீட்டின் பின்புறம்/கொல்லைபுற அலங்கார மீன்வளர்ப்பு:

வீட்டின் பின்புறம்/கொல்லைபுற அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.3,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ. 1,20,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ. 1,80,000/- மானியமாக வழங்கப்படும்.

நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு:

நடுத்தர அளவிலான அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.8,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.3,20,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.4,80,000/- மானியமாக வழங்கப்படும்.

நவீன மீன் அங்காடி (KIOSK):

நவீன மீன் அங்காடி (KIOSK) திட்டத்திற்கு அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.10,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.4,00,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ. 6,00,000/- மானியமாக வழங்கப்படும்.

குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம்:

குளிரூட்டப்பட்ட நான்கு சக்கர வாகனம் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.20,00,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.8.00,000/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ. 12,00,000/- மானியமாக வழங்கப்படும்.

Read more: பாசிப்பயறு மற்றும் நிலக்கடலையில் புதிய இரகம் வெளியீடு- கைக்கொடுக்குமா விவசாயிகளுக்கு?

குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம்:

குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனம் அலகு ஒன்றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.75,000/-ல் பொதுப்பயனாளிகளுக்கு (GC) 40% மானியம் ரூ.29,319/- பெண்கள் மற்றும் ஆதிதிராவிட பயனாளிகளுக்கு (SC) 60% மானியம் ரூ.44,319/- மானியமாக மீனவர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும்.

மேலும் இத்திட்டத்தில் பயன் பெற விரும்புபவர்கள் உடனடியாக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை (எண்.16,5-வது மேற்கு குறுக்கு தெரு, காந்திநகர், காட்பாடி, வேலூர்- 632006) (அலுவலக தொலைபேசி எண். 0416- 2240329, அலைபேசி எண். 75400 09947, மின்னஞ்சல் adfifvellore1@gmail.com) தொடர்பு கொண்டு உரிய விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார்.

Read more:

நெல்லில் விதை உறக்கம்- என்ன செய்து நீக்கலாம்? வல்லுநர்களின் விளக்கம்

அரசின் மானியத்தோடு வீட்டுக் கொல்லைப்புறத்தில் அலங்கார வண்ண மீன் வளர்ப்பது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)