அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்ய உள்ள வழிகள் என்ன? நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் மக்காச்சோள சாகுபடி சிறப்புத் திட்டம்- விவசாயிகளுக்கு ரூ.6000 மதிப்பிலான தொகுப்பு! கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 4 February, 2023 10:52 AM IST
40% subsidy for brackish water Prawns farming

தமிழ்நாட்டில் இறால் உற்பத்தியினை அதிகரிக்கவும் மற்றும் புதியதாக இறால் பண்ணை தொழிலில் ஈடுபட விரும்வோர் பயன்பெறும் வகையில் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதியகுளங்கள் அமைத்தல் மற்றும் உள்ளீடுகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

மேலும் படிக்க: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் அமைத்தல் திட்டத்தில் 01 ஹெக்டேர் பரப்பிற்கு ஆகும் மொத்த செலவினம் ரூ.8 லட்சத்தில் பொது பிரிவினருக்கு 40% மானியமாக ரூ.3.20 லட்சம் மற்றும் பெண்களுக்கு 60% மானியமாக ரூ.4.80 லட்சம் வழங்கப்படும். மேலும் இக்குளங்களுக்கு இறால் வளர்க்க உள்ளீடுகள் வழங்கும் திட்டத்தில் மொத்த செலவினம் ரூ.6 லட்சம் பொதுபிரிவினருக்கு 40% மானியமாக 2.40 லட்சமும் மற்றும் பெண்களுக்கு 60% மானியமாக ரூ.3.60 லட்சம் வழங்கப்படும். மேற்படி திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பொது பிரிவினருக்கு 6 ஹெக்டர் மற்றும் பெண்களுக்கு 2 ஹெக்டர் என மொத்தம் 8 ஹெக்டர் இலக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

மேற்படி திட்டங்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் தகுதி மற்றும் மூப்புநிலையின் அடிப்படையில் முன்னுரிமை அளித்து தேர்வு செய்யப்படும். எனவே விண்ணப்பிக்க விரும்பும் இறால் வளர்ப்பு விவசாயிகள் எண்.873/4, அறிஞர் அண்ணாசாலை, கீழவாசல், தஞ்சாவூர் என்ற முகவரியில் இயங்கும் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு விண்ணப்பம் பெற்று பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவிக்கிறார்.

மேலும் படிக்க:

வங்கி விடுமுறை பிப்ரவரி 2023: வங்கி வேலையை இந்நாட்களில் திட்டமிடாதீர்

உவர் நீர் இறால் வளர்ப்பு:

உவர்நீர் நிலைகளுக்கு அருகாமையில் வண்டல்மண் மற்றும் களிமண் கலந்த இடங்கள் உவர் இறால் வளர்ப்பு குளங்கள் அமைய ஏற்றவையாகும். குளம் அமைப்பதற்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் குளத்தின் மொத்த ஆழமானது வர்ப்பையும் சேர்த்து 6 அடி இருக்குமாறு அமைத்து அதில் 3.5 முதல் 4 அடி அளவு நீரை தேக்கி வைத்தல் தேவையானது. அமைக்கப்படும் ஒவ்வொரு குளமும் 0.5 முதல் 1.5 எக்டர் பரப்பளவில் செவ்வக வடிவில் இருத்தல் அவசியம். குளக்கரையின் சரிவானது 1:1:5 என்ற விகிதத்தில் இருத்தல் வேண்டும்.

குளத்தை தயார் செய்தல்

குளங்களை நன்கு காயவிட்டு அக்குளங்களை உழவேண்டும். குளத்தில் 25 கிலோ சுண்ணாம்பிட்டு அவற்றின் கார அமிலத்தன்மையானது 7.5 முதல் 8.5 வரை உயர்த்த வேண்டும். இயற்கை உரங்களான மக்கியசாணம் (1000 கிலோ எக்டருக்கு) மற்றும் கோழி எரு (250 கிலோ எக்டருக்கு) இட்டு குளத்தில் நீர் மட்டம் 30 செ.மீ அளவில் வைக்க வேண்டும். செயற்கை உரங்களான யூரியா மற்றும் சூப்ர் பாஸ்பேட் 4:1 என்ற விகிதத்தில் 25 முதல் 50 கிலோ வரை எக்டருக்கு வழங்க வேண்டும். உரமிடுதல் மூலம் இயற்கை உயிர் உணவுகளின் உற்பத்தியை உயர்த்தலாம், சில நாட்கள் சென்ற பின்னர் நீரின் நிறம் பசுமையாக மாறியதும் நீர்மட்டத்தை 1 மீட்டருக்கு உயர்த்தி பின்னர் தேவைக்கேற்ற உரமிட்டு அவற்றை அறுவடை செய்யலாம்.

மேலும் படிக்க:

தமிழகத்தில் தொடர் மழை நீடிக்கும், வானிலை ஆய்வு மையம் தகவல்!

அசத்தலான தினை அவுல் வைத்து சூப்பர் டிபன்!

English Summary: 40% subsidy for brackish water Prawns farming
Published on: 03 February 2023, 11:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now