Animal Husbandry

Saturday, 07 May 2022 12:13 PM , by: Elavarse Sivakumar

தாராபுரம் அருகே கோழிப்பண்ணையில் இடி தாக்கிய சம்பவத்தில், தாக்கி 5 ஆயிரம் கோழிகள் தீயில் கருகி பலியாகின. இயற்கையின் இந்தக் கோரத்தாண்டவம், கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளையும், கால்நடை ஆர்வலர்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள பி.குமாரபாளையம், சம்பளதோட்டம் பகுதியில் ராமசாமி என்பவர் 3 கோழிப்பண்ணைகளை அமைத்து பராமரித்து வருகிறார். இதில், சுமார் 10 ஆயிரம் கறிக்கோழிகளை ஒப்பந்த அடிப்படையில் வளர்க்கப்பட்டு வந்தன.

இந்நிலைநில் 2 நாட்களுக்கு முன்பு, இரவு வேளையில், தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
அப்போது ராமசாமியின் கோழிப்பண்ணை அருகில் இருந்த தென்னை மரத்தின் மீது இடி விழுந்து, கறிக்கோழி பண்ணை முழுவதும் தீக்கு இரையானது.

கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் பண்ணையில் இருந்த 5 ஆயிரம் கோழிகளும் கருகி உயிரிழந்தன. இடி தாக்கி 5 ஆயிரம் கோழிகள் பலியான சம்பவம், கால்நடை விவசாயிகளையும், கால்நடை ஆர்வலர்களையும், பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

மேலும் படிக்க...

டாஸ்மாக் பணியாளர்களுக்கு ரூ.500 - அமைச்சர் தகவல்

தேர்த்திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து விபத்து - 11 பேர் உடல் கருகி பலி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)