மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 April, 2022 10:48 AM IST
Goat Breeder Business..

சொந்தமாக பிசினஸ்:

கொரோனா வந்த பிறகு சொந்தமாக தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு வந்துள்ளது. கொரோனா ஊரடங்கு காரணத்தால் பலர் வேலை இழந்துள்ளனர். அதனால் சுய தொழிலில் கவனம் செலுத்துகிறார்கள். எனவே நீங்கள் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பினால், இந்த தொழில் உங்களுக்கு அதிக லாபத்தை அளிக்கும். இதற்காக நீங்கள் அதிகம் செலவு செய்ய வேண்டியதில்லை மற்றும்  லாபமும் அதிகமாக இருக்கும். இந்தத் தொழிலுக்கு அரசாங்கத்திடமிருந்து மானியமும் கிடைக்கும்.

என்ன தொழில்:

ஆடு வளர்ப்பு மிகவும் லாபகரமான தொழில். இதில் மிகக் குறைந்த முதலீட்டில் பெரிய வருமானத்தைப் பெறலாம். இதைத் தொடங்க அதிக செலவு இல்லை. கிராமப்புறங்களில் உள்ள ஏராளமானோர் ஆடு வளர்ப்பு தொழிலில் பெரும் தொகையை சம்பாதித்து வருகின்றனர்.

எப்படி தொடங்குவது:

உங்கள் வீட்டிலிருந்தே இந்தத் தொழிலைத் தொடங்கலாம். கிராமப் பொருளாதாரத்தின் முதுகெலும்பு ஆடு வளர்ப்பு மற்றும் விவசாயம். இன்று ஆடு வளர்ப்பு தொழிலை மட்டுமே நம்பி வாழும் குடும்பங்கள் ஏராளம். ஆடு வளர்ப்பில் வருமானம் மற்றும் பால் மற்றும் உரம் போன்ற பல நன்மைகள் உள்ளன.

எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்:

இந்தத் தொழிலைத் தொடங்க அதிக முதலீடு தேவையில்லை. அரசு உங்களுக்கு உதவும். கிராமப்புறங்களில் கால்நடை வளர்ப்பு மற்றும் சுயதொழில் ஆகியவற்றை ஊக்குவிக்க கால்நடை உரிமையாளர்களுக்கு 35 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இது தவிர மாநில அரசுகளும் மானியம் வழங்குகிறது. இதேபோல், வங்கியில் கடன் பெறலாம். ஆடு வளர்ப்புக்கு நபார்டு வங்கி கடன் வழங்குகிறது.

என்ன பலன்:

இந்தத் தொழிலை எங்கு தொடங்குவது, தீவனம், தண்ணீர், உழைப்பு, கால்நடை உதவி, சந்தை வாய்ப்பு மற்றும் ஏற்றுமதி திறன் ஆகியவற்றைப் பற்றிய அறிவு உங்களுக்கு இருக்க வேண்டும். ஆட்டுப்பால் உணவு மட்டுமல்ல, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி, ஆட்டிறைச்சியும் பெரிய வியாபாரம் செய்யலாம். இதன் உள்நாட்டு தேவை மிக அதிகம்.

நீங்கள் எவ்வளவு பணம் சம்பாதிக்க முடியும்:

ஆடு வளர்ப்பு தொழில் மிகவும் லாபகரமானது. நீங்கள் லாபம் ஈட்ட பல வழிகள் உள்ளன. சராசரி வருமானம் ரூ. 18 பெண் ஆடுகள் மூலம் 2,16,000 சம்பாதிக்கலாம். அதே சமயம் ஆண் ஆடுகள் சராசரியாக ரூ. 1,98,000 வருமானமும் அதை தொடரந்து வியாபாரத்திலும்  முன்னேற்றம் ஏற்படும்.

மேலும் படிக்க:

ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாந்திர வருவாய் பெற வாய்ப்பு!

ஆடு வளர்த்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய்! அருமையான தொழில் வாய்ப்பு!

English Summary: A goat breeder into Ambani!
Published on: 18 April 2022, 05:36 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now