மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 March, 2021 12:46 PM IST
Credit : Dailythanthi

கோடைகாலத்தை முன்னிட்டு, தேனி மாவட்டத்தில், கால்நடைகளுக்கான தீவனத்தைத் தேவையான அளவு கையிருப்பு வைக்கும் நடவடிக்கைகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

தீவனத் தேவை அதிகம் (The need for fodder is high)

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி பகுதி சுற்றுப்புற கிராமங்களில் விவசாயிகள் விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பையும் செய்து வருகின்றனர். இந்நிலையில், கால்நடைகளுக்கான தீவனத் தேவையைப் பூர்த்தி செய்ய விவசாயிகள் போராட வேண்டி உள்ளது.

தீவனம் கிடைக்காது (Fodder is not available)

குறிப்பாக மழை மற்றும் பனி காலத்தில் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளுக்குப் பசுந்தீவனங்கள் கிடைக்கும். கோடைகாலம் உள்ளிட்ட மற்ற காலங்களில் தேடி அலைந்தாலும் கிடைப்பது சிரமம்.

இதன் காரணமாகத் தீவனத் தட்டுப்பாடு ஏற்படும். இறவைப் பாசன நிலங்களில் மட்டுமே ஆண்டு முழுவதும் கிடைக்கும் பசுந்தீவனத்தைக் கொண்டு, கால்நடைகளின் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாது.

சேமிப்பு அவசியம் (Storage is essential)

அறுவடைக்காலத்தில் கிடைக்கும், வைக்கோல், சோளத்தட்டைகளை விலைக்கு வாங்கித் தீவனத்திற்காக முன்கூட்டியே சேமிப்பு வைத்துக்கொள்வது நல்லது. ஏனெனில் கோடை காலத்தில் தீவனங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதுடன், தீவனத் தட்டுப்படும். அதேநேரத்தில் செயற்கைத் தீவனங்களால், கூடுதல் செலவும் ஏற்படக்கூடும்.

விவசாயிகள் முனைப்பு (Farmers initiative)

எனவே இத்தகைய செலவுகளில் இருந்துத் தப்ப வேண்டுமானால், தீவனங்களை முன்கூட்டியே கையிருப்பு வைத்துக்கொள்வது சிறந்தது. இதன் அடிப்படையில், தீவனங்களைக் கையிருப்பு வைக்கும் பணியில் விவசாயிகள் முனைப்புக் காட்டி வருகின்றனர்.

கையிருப்பு தேவை (Reserve required)

இதுகுறித்து ஆண்டிப்பட்டி பகுதி விவசாயி ஒருவர் கூறுகையில், கறவை மாடுகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் ஆகியவை அதிகம் தேவைப்படும். இப்பகுதியில் நெல் விளைச்சல் குறைந்ததால், வெளி ஊர்களில் இருந்து வைக்கோல் வாங்கி இருப்பு வைக்கப்படுகிறது.

கோடையை ஒட்டி, அடுத்த 3 மாதங்களுக்கு மாடுகளின் தீவனங்களுக்கு ஏற்படும் விலைஅதிகரிப்பும், தட்டுப்பாடும் மாடுகள் வளர்க்கும் விவசாயிகளுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தும். இதனை சமாளிப்பதற்காக, முன்கூட்டியே திட்டமிட்டு, தீவனங்களை சேமித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

4,500 கோழிக்குஞ்சுகள் பறிமுதல்- தேர்தல் கண்காணிப்புக் குழு அதிரடி!

இயற்கை விவசாயம் செய்ய மானியம்-விண்ணப்பிக்க அழைப்பு!

சரிந்தது சின்ன வெங்காயத்தின் விலை -மேலும் குறைய வாய்ப்பு!

English Summary: Approaching Summer - Farmers Saving Fodder for Livestock!
Published on: 04 March 2021, 12:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now