Animal Husbandry

Monday, 20 December 2021 12:05 PM , by: Deiva Bindhiya

Buffalo worth Rs 80 lakh! Celebrity Gajendra!

மகாராஷ்டிராவின் சாங்லி மாவட்டத்தில் உள்ள தாஸ்கான் கிராமத்தில் உள்ள புதிய பிரபலம் கஜேந்திரா, ஒன்றரை டன் எடையும் ரூ.80 லட்சம் விலையும் கொண்ட எருமை.

மகாராஷ்டிராவின் சாங்லி(Sangli) மாவட்டத்தின் தாஸ்கான் கிராமத்தில் உள்ள புதிய பிரபலம் கஜேந்திரா, ஒன்றரை டன் எடையும் ரூ.80 லட்சம் விலையும் கொண்ட எருமை ஆகும். விவசாயிகள் சங்கமான ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதன் சார்பில் டிசம்பர் 16 முதல் டிசம்பர் 20 வரை தாஸ்கானில் நடத்தப்பட்ட கண்காட்சியின்போது, மகாராஷ்டிரா-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள மங்சுலி கிராமத்தில் இருந்து எருமை மாடு கொண்டுவரப்பட்டது. இந்த எருமை மாடு விலாஸ் நாயக் என்ற விவசாயிக்கு சொந்தமானதாகும்.

முழுமையாக வளர்ந்த இந்த எருமை டாஸ்கான் கிராமத்தையே கவர்ந்துள்ளது, ஏனெனில் அதன் அற்புதமான இடை, மற்றும் அளவு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கும் நல்ல மரபணுக்களைக் குறிக்கிறது. இதனால், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், நான்கு வயதுடைய கஜேந்திரன் போன்ற எருமை மாடுகளின் மூலம் லட்சக்கணக்கான ரூபாய்க்கு நல்ல மகசூல் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

கஜேந்திரனின் பெருமைக்கேற்ப, கஜேந்திரன், ஒரு நாளைக்கு 15 லிட்டர் பாலை உட்கொள்கிறது. எருமை(Gajendran) ஒரு நாளைக்கு புல் மற்றும் கரும்புகளை மட்டுமே நான்கு முறை உண்ணும்.

மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயிகள் சங்கமான ஸ்வாபிமானி ஷேத்காரி சங்கதன் மாவட்டத் தலைவர் மகேஷ் கராடே “இந்த எருமை நமது விவசாயப் பெருமையாக மாறியுள்ளது. நல்ல எருமை மாடுகளை இனப்பெருக்கம் செய்வதற்காக, லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும். கஜேந்திராவின் உத்வேகத்தால், நம் கிராமத்தின் விவசாயிகள் ஆரோக்கியமான கால்நடைகளை வளர்ப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும், இதனால் அவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும், என்று கூறினார்.

மேலும் அவர், "நமது மாவட்ட விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த, இதுபோன்ற சிந்தனையுடன் கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவது அவசியமாகியுள்ளது," என்றும் தெரிவித்தார்.

மேலும் படிக்க:

ரூ.5 ஆக குறைந்த முட்டை விலை! காரணம் என்ன?

ஜல்லிக்கட்டில் நாட்டு மாடுகளுக்கு மட்டுமே அனுமதி!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)