Animal Husbandry

Monday, 14 March 2022 07:52 PM , by: R. Balakrishnan

மதுரை ஆவினில் மாட்டுத்தீவன மானியம் ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளதாலும், பால் பணம் பட்டுவாடா தொடர்ந்து இழுத்தடிப்பதாலும் பால் உற்பத்தியாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆவினுக்கு பால் வழங்க 800க்கும் மேற்பட்ட கூட்டுறவு சொசைட்டிகள் உள்ளன. ஒவ்வொரு சொசைட்டியிலும் மாடு வளர்க்கும் பால் உற்பத்தியாளர்களுக்கு குச்சி புண்ணாக்கு மாட்டுத் தீவனம் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

தீவன மானியம் (Fodder Subsidy)

ஆவினில் அவ்வப்போது கிடைக்கும் இலாபத்தை பொறுத்து தீவன மானியம் மாற்றப்படும். தற்போது ஒரு கிலோவுக்கு 25 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 வீதம் அரசு குறைத்ததால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட தீவன மானியத்தை நிறுத்தி விட்டதாக உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் வெண்மணிசந்திரன் கூறுகையில், மதுரை ஆவின் இலாபத்தில் இயங்குவதால் 50 சதவீத தீவன மானியம் கேட்கிறோம். ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 25 சதவீத மானியம் ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை.

பாலுக்கான பட்டுவாடாவும் 30 நாட்கள் வரை நிலுவையில் உள்ளதால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். என்றார்.

மேலும் படிக்க

பசுவில்லாத பால்: அதே மணம், சுவை: உடலுக்கு நல்லதா?

வீசும் காற்றைக் கட்டுப்படுத்தி கூடுதல் இலாபம் தரும் 'ஜிங்குனியானா' சவுக்கு மரம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)