மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 November, 2018 5:32 PM IST

மத்திய மைய அரசால் அறிவிக்கப்பட்ட பயிர் ரகங்களில் உயர்தரமான விதைகள் உற்பத்தி செய்து, சான்றளிப்பின் மூலம் விவசாயிகளுக்கு கிடைக்கச் செய்வதே விதை சான்றளிப்பின் முக்கிய நோக்கமாகும்.

சான்றுவிதையின் முக்கியத்துவம்

சான்று விதைதான் பயிர் வளர்ச்சியின் வெற்றி மற்றும் அபாய நிலையை மேம்படுத்தும் ஒரு கருவி ஆகும்.

சான்று விதை பயன்படுத்துவதற்கான 10 காரணிகள்

விதை தூய்மை

சான்று விதையானது உற்பத்தி தரத்தை பூர்த்தி செய்யும்படி வளர்க்கப்படுகிறது. இந்த விதை குறைந்தபட்ச களை விதை அல்லது பிற கலப்பினங்களைக் கொண்டுள்ளது.

இனத்தூய்மை

சான்றுவிதை உபயோக அமைப்பு மரபுத் தூய்மையை அதிகப்படுத்துகிறது. பிற இரகம், இதர பயிர் விதைகள் மற்றும் களைவிதைகளை குறைக்கின்றது.

விதைத்த உத்திரவாதம்

வயல் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் மூன்றாவது நபர் ஆய்வு மேற்கொள்வதால் நமக்குத் தேவையான தரமான விதைகள் கிடைக்கின்றது. இதன் மூலம் தாம் எதிர்பார்த்த விதைத்தரம் மற்றும் பிறருக்கு விதைத்தர உத்திரவாதம் கொடுக்க முடிகிறது.

புதிய தொழில்கள் உருவாதல்

உணவுப் பொருள்களை தயாரிப்போருக்குத் தேவையான ரகங்களை கொடுக்க முடியும். சான்று விதைகளை உபயோகிப்பதன் புதிய தொழில்வாய்ப்புகளும், சந்தை வாய்ப்புகளும் உருவாக வழிவகை செய்கிறது.

புதிய மரபுப் பண்புகள்

அதிக விளைச்சல், பூச்சி எதிர்ப்பு சக்தி, வறட்சி தாங்கும் சக்தி, களைக் கொல்லி எதிர்ப்புத் திறன் மற்றும சில ஆய்வுகள் செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்ட விதைகளை விதைச்சான்று மூலம் வழங்கப்படுகிறது.

வார்த்தையின் உட்பொருள்

சான்று விதைகளை உபயோகிக்கும் விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் மற்றவர்களிடம் கூறும் பயிர் ரகங்களை உறுதியாக வழங்க முடிகிறது.

பயிர்கடனுக்கு உத்திரவாதம்

சான்று விதைகள் பயிர்கடன் வாங்குவதற்கு தேவையான ஒப்புதல் வழங்குகிறது. சான்றுவிதை உபயோகிப்பதால் அபாயம் குறைகிறது என்பதை கடன் வழங்குவோர் அறிந்துள்ளனர்.

பிற இடுபொருள்களின் பயன்பாடுகளை அதிகப்படுத்துதல்

சான்று விதை மரபு மற்றும் இனத்தூய்மையை கொண்டுள்ளதால் பிற இடுபொருள்களின் பயன்பாடுகளை அதிகப்படுத்துகிறது. இதன்மூலம் பிறஇடுபொருள்களின் தரம் அதிகரிக்கிறது.

சந்தையில் கூடுதல் விலை

நல்ல இடுபொருள் நல்லப் பயிரை உருவாக்குகிறது. ஆனால் விதைதான் முதன்மை இடுபொருளாக அதிக விளைச்சல் மற்றும் கூடுதல் விலை கொடுக்கின்றது.

தோற்றம் கண்டறிதல்

உணவு பாதுகாப்பு மற்றும் அறியும் திறன் இவை இரண்டும் வேளாண்மையில் ஒரு முக்கியப் பங்கை வகிக்கின்றது. பொருட்களின் தோற்றம் தெரிந்தால் அந்தப் பொருட்களுக்கு நம்மால் உறுதியாக உத்திரவாதம் வழங்க முடியும். தொடக்கத்திலிருந்து சான்று விதையானது ஒரு தரக்கட்டுப்பாட்டு அமைப்பு மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. சான்றுவிதை, அதனை கண்டறிவதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் வழங்குகிறது.

English Summary: Check the Seeds- Certified Seeds
Published on: 15 November 2018, 05:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now