மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 August, 2019 10:12 PM IST

மடிவீக்க நோய் கறவை மாடுகளில் ஏற்படும் மடி அழற்சியை குறிக்கும். பல்வேறுபட்ட காரணிகளால் ஏற்படும் இந்நோய் மாடுகளில் பால் உற்பத்தியையும் அதன் தரத்தையும் வெகுவாக குறைத்து விடுவதால் பண்ணையாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது.  கலப்பின மாடுகள் மற்றும் வெளிநாட்டின மாடுகளில் இந்நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது.  நாட்டின மாடுகளிலும் பால் உற்பத்தி குறைவாக உள்ள மாடுகளிலும் இந்நோய் பாதிப்பு அரிதாகவே ஏற்படுகிறது.

நோய்க் காரணிகள்

  • ​பல்வேறு வகையான பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் மைக்கோபிளாஸ்மா போன்ற நுண்ணுயிரிகள் இந்நோய்க்கான முதன்மையான காரணிகளாகும்.
  • ​முழுவதுமாக பால் கறக்கமால் விடுதல், சுகாதாரமற்ற சுற்றுப்புறம், நோய்க்கிருமிகளின் தொற்று, நுண்ணுயிரிகள் பெருக்கமடைய ஏற்ற சாதகமான உடல் நிலை, நோய் பாதித்த பசுக்களோடு தொடர்பு, கிருமித் தொற்று உடைய உபகரணங்கள் போன்றவற்றின் மூலமாக இந்நோய் பரவுகிறது.
  • நோயின் அறிகுறிகள்
  • ​திடீரென பால் உற்பத்தி குறைந்தும் பாலின் நிறம் இயல்பில் இருந்து மஞ்சள் நிறத்திற்கு மாறியிருப்பதும் முக்கியமான அறிகுறிகளாகும் .
  • பாதிப்பை பொறுத்து சில சமயங்களில் இரத்தம் கலந்த பால் மடியிலிருந்து கிடைக்கும்.
  • ​மடியானது வீக்கமடைந்து காணப்படுவதுடன் சூடாகவும் இருக்கும். தொடும் போது கட்டியாக இருக்கும்.
  • ​மிகுந்த வலியின் காரணமாக மாடானது பால் கறக்க அனுமதிக்காது.

சிகிச்சை முறைகள்

  • ​நோயினால் பாதிக்கப்பட்ட மாட்டின் மடியிலிருந்து பாலினை முழுவதுமாக கறந்து முறையாக கிருமி நீக்கம் செய்து தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் கொட்டி விட வேண்டும்.
  • ​ஐஸ் கட்டி கொண்டு ஒத்தடம் கொடுப்பதால் வீக்கம் குறையும்.
  • ​பால் கறப்பதற்கு முன்பும், பால் கறந்த பின்பும் மடியினை சுத்தமாக கழுவ வேண்டும்.  பால் கறந்த பின்பு மடிக் காம்பினை கிருமி நாசினிக் கரைசலில் முக்கி எடுக்க ​வேண்டும்.
  • கொட்டகையை சுகாதாராமான முறையில் பராமரிக்க வேண்டும்  “நோய் பாதித்த மாடுகளை மற்ற மாடுகளில் இருந்து தனிமைப்படுத்துவது சிறந்தது.
  • மாடுகளை மண் தரையில் பராமரிப்பது நல்லது.  கான்கிரீட் தரைகளை விட மண் தரையில் நுண்கிருமிகளின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்.
  • ​தகுதியான கால்நடை மருத்துவரை அணுகி உரிய நுண்ணுயிர் எதிர் மருந்துகளைக் கொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

தடுப்பு முறைகள்

  • ​நோய் பாதித்த மாடுகளை பிற மாடு மாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்துதல்.
  • ​பாதிப்பு உள்ள காம்பில் கன்றுகளுக்கு பால் ஊட்டக் கூடாது.
  • ​ஆரோக்கியமான மாடுகளிடம் பால் கறந்து பின்னர் நோய் பாதித்த மாடுகளில் பால் கறக்க வேண்டும்
  • ​எளிதில் பரவக் கூடிய நோய் என்பதால் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
  • ​தூய்மையான முறையில் கொட்டகைகளை பராமரிப்பதும் விலங்குகளை சுகாதாரமான முறையில் பேணுதலும் நல்ல பயனைக் கொடுக்கும்.
  • ​கொட்டகை, சுற்றுப்புறம் போன்றவற்றை தக்க கிருமிநாசினிக் கொண்டு நாளொன்றுக்கு இரண்டு முறை சுத்தப்படுத்த வேண்டும்.

S. Alimudeen 
Madras Veterinary College,
TANUVAS,
Chennai.

English Summary: Common Disease Of Dairy Cow: Guidelines About Mastitis Diseases and Its Treatment
Published on: 11 August 2019, 06:37 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now