மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 1 October, 2020 6:53 AM IST

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மாடுகளை மேய்ச்சலுக்கு செல்ல அனுமதிப்பதில் காலதாமதம் தொடருவதால், தீவனப் பற்றக்குறையால் மாடுகள் அழியும் நிலையில் ஏற்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டியுள்ள கிராமங்களில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த மாடுகளை அருகேயுள்ள வனப்பகுதிகளுக்கு மேச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

நீதிமன்றம் மூலம் அனுமதி (Court Permission)

ஆனால் சமீப காலமாக வனப்பகுதிக்குள் மாடுகளை மேச்சலுக்குச் செல்ல வனத்துறை அனுமதி அளிப்பதில்லை. இதனால் மாடுகளை பராமரிக்க முடியாத நிலையில் மாடுகள் வளர்ப்போர் நீதிமன்றம் மூலமாக அனுமதி பெற்றனர். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் வனப்பகுதியில் மேச்சலுக்கு மாடுகளை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் மூலமாக வனத்துறையினா் அனுமதி வழங்குகின்றனர்.

விவசாயிகள் வேதனை (Farmers Concern)

அதன்படி இந்தாண்டு ஜூன் மாதத்துக்குப் பின் அனுமதி வழங்கவில்லை. இதனால் தீவனப் பற்றாக்குறையால் மாடுகள் படிப்படியாக குறைந்து வருவதாகவும், மேய்ச்சலுக்கு வனத்துறை உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகத்துக்கு மாடு வளா்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மாடு வளர்ப்போர் சங்கத்தினர் கூறுகையில், விவசாயத்துடன் இணைந்து செய்யும் மாடு வளர்ப்பு தொழிலை செய்து வருகிறோம். இப்பகுதியில், 1.50 லட்சமாக இருந்த மாடுகளின் எண்ணிக்கை தற்போது, 15, ஆயிரமாகக் குறைந்து விட்டது.

தீர்மானம் (Resolution)

இதே நிலை நீடித்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நாடு மாடுகள் இனமே அழிந்து விட வாய்ப்புள்ளது. இது குறித்து எரசக்கநாயக்கனூரில் நடைபெற்ற மாடுகள் வளா்போர் சங்க கூட்டத்தில், பாரம்பரியமான மாடுகளைப் பாதுகாக்கவும், மாடு வளர்ப்போரின் வாழ்வாதாரத்தைக் காக்கவும் வனப்பகுதியில் மேய்ச்சலுக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

மேலும் படிக்க...

எருதுகளை செல்லமாகக் கொஞ்சி வேலைக்குப்பழக்குவது எப்படி? புதிய யுக்திகள்!

கோழிகளைத் தாக்கும் வெள்ளைக் கழிச்சல் நோய்- நிவாரணம் தரும் இயற்கை மருந்துவம்!

 

English Summary: Cows that continue to graze are at risk of extinction!
Published on: 01 October 2020, 06:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now