மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 14 September, 2019 5:39 PM IST

கால்நடை வளர்ப்பு இந்தியாவில் ஒரு முக்கியமான வணிகமாகும். இந்தியாவில் பசு, எருமை மற்றும் ஆடுகளின் அளவு அதிகமாக உள்ளது. ஆடுகளில்  20 க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன ஆனால் இந்த ஆட்டு இனங்களில் இறைச்சி மற்றும் பால் வகைகளை பிரிப்பது மிகவும் கடினம். இதில் சில இனங்கள் பால் மற்றும் இறைச்சி ஆகிய இரண்டிற்குமே பராமரித்து வளர்க்கப்படுகிறது, இவ்வகை இனங்களானது வரதட்சணை இனங்கள் என அழைக்கப்படுகிறது.

இந்தியாவில் கால்நடை வளர்ப்புகளில்  ஆடும் முக்கியத்துவம் வகிக்கிறது. இறைச்சி, பால், இழை மற்றும் தோல்களுக்காக இவை வளர்க்கப்படுகின்றன. இந்தியாவின்  வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களில் வெவ்வேறு இனங்களை சேர்ந்த  ஆடுகள் சில உள்ளன. வட இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் இறைச்சி மற்றும் இழை இவ்விரண்டிற்காக மட்டுமே வளர்கின்றன. மேலும் ஆடு ஏழை மற்றும் விவசாயிகள் வளர்க்கும் கால்நடையாக இருக்கிறது, ஏனென்றால் இதனை வளர்ப்பதற்கும், இதற்கான உணவு கொடுப்பதற்குமான செலவு மிக குறைவு. இத்தகைய காரணத்தாலேயே மஹாத்மா காந்தி ஆடுகளை  ஏழைகளின் வளர்ப்பு பிராணி என்று கூறினார்.

ஆட்டுப்பாலின் அம்சங்கள்

ஆட்டுப்பாலில் கொலஸ்ட்ரால் (Cholesterol) குறைவாக இறுகுப்பதால் இது குழந்தைகளின் ஜீரணத்தில் எவ்வித கோளாறையும் ஏற்படுத்தாது. மேலும் குழந்தைகளுக்கு ஆட்டுப்பால் கொடுப்பதே சாலை சிறந்தது.

ஆட்டுப்பாலில் உள்ள கொழுப்பு குளோபல்ஸ் (Fat Globules) சிறியதாக இருப்பதால் பால் ஏடு தனித்து வராது. எனவே ஆட்டுப்பால் இயல்பான உடற்கூறு என்று அழைக்கப்படுகிறது.

ஆட்டுப்பாலில் வைட்டமின் 'A' (Vitamin A) அதிகம் உள்ளது.                     

ஆட்டுப்பாலில் அதிக குளோரின் (Chlorine) மற்றும் சிலிக்கான் (Silicon) உள்ளன.

ஆட்டுப்பால் மற்றும் மனிதப்பாலின் கட்டமைப்பு கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக அமைந்திருக்கும்.

ஆட்டுப்பாலில் உள்ள  கொழுப்பு குளோபியூல்கள் சிறியதாக இருப்பதால் ஜீரணத்திற்கு சிறந்ததாக உள்ளது.

பசும்பாலினால் ஒவ்வாமை (Allergy)  ஏற்படுபவர்களுக்கு ஆட்டுப்பாலை கொடுக்கலாம்.

மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஆட்டுப்பாலை கொடுத்தால் மிக நல்லது.

அல்சர் (ulcer), வயிற்றில் ஏற்பட்டுள்ள புண் ஆகிய பிரச்சனைக்கு ஆட்டுப்பாலை காய்ச்சாமல் அப்படியே குடித்து வர விரைவில் குணமாகிவிடும். 

ஆட்டுப்பாலின் முக்கியத்துவம்

உடலின் சக்தியை உருவாக்கவும், அதிகரிக்கச் செய்யவும் அவசியமானது ரிபோப்லாஸ்டின் (Riboplastin) என்று அழைக்கப்படும் வைட்டமின். மேலும் இந்த வைட்டமின்னானது ஆட்டுப்பாலில் அதிகம் காணப்படுகிறது. எனவே உடல் ஆரோக்கியத்தையும், சக்தியையும் அதிகரிக்க ஆட்டுப்பால் ஓர் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.

ஆட்டுப்பாலில் கால்சியம் (Calcium) அதிகம் இருப்பதால் எலும்புகள் இடையூறு குறைக்கிறது மற்றும் பெரிய குடல் புற்றுநோய் தடுக்கப்படுகிறது.

கெட்டக்கொழுப்பை அதிகரிக்க விடாமல்  உடல் பருமனை தடுக்கிறது மற்றும் பெண்களுக்கு மார்பக புற்றுநோயை தடுக்க உதவுகிறது.

அதிக பொட்டாசியம் (potassium)  இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைப்பதில் ஆட்டுப்பால்  உதவுகிறது.

ஆட்டுப்பாலில் சர்க்கரை மற்றும் கொலெஸ்ட்ரோலின் அளவு மிக குறைவாக இருப்பதால் நீரிழிவு நோயாளிகள் தாராளமாக பருகலாம்.

K.Sakthipriya
Krishi Jagran 

English Summary: Do you know about the benefits of Goat Milk: Here Are some importants and Features of Goat Milk
Published on: 06 April 2019, 07:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now