Animal Husbandry

Monday, 12 October 2020 11:36 AM , by: Elavarse Sivakumar

கொங்கு மண்டலத்தில், மலைக்காலங்களில் வளரும் கொலுக்கட்டான் புல் சூழ்ந்த கொரங்காடு பகுதியில், மாடுகளை மேய்ச்சலுக்கு விடும்போது கயிற்றால் கட்டத் தேவையில்லை.

கொரக்காடு

  • கொங்கு பகுதியில் உள்ள கால்நடைகளின் மேய்ச்சல் நிலம் கொரங்காடு. இங்கு வடகிழக்கு பருவமழை, தென் மேற்கு பருவமழை காலங்களில் கொரங்காடுகளில் கொலுக்கட்டான் புல் எனப்படும் ஒருவகை தீவனப் புல் அடர்ந்து வளர்ந்து நிற்கும்.

  • இப் புல்லில் உள்ள நுண்ணூட்டச் சத்துதான் காங்கேயம் கால்நடைகளின் திடகாத்திரமான வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம்.

  • கொரங்காடுகளை சுற்றி நான்கு பக்கங்களிலும் கிழுவன் வேலி இருக்கும்.

    இதனால் கொரங்காடுகளில் மேயும் கால்நடைகளை கயிற்றால் கட்டி மேய்க வேண்டிய தேவை இல்லை.

  • மாடுகள் தானாக மேய்ந்து விட்டு மர நிழலில் வைத்திருக்கும் கல் தொட்டியில் இருக்கும் நீரை அருந்தி ஓய்வெடுக்கும்.

  • அந்த வகையில் காங்கேயம் அருகிலுள்ள சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தின் கொரங்காட்டில் இன்றும் மாடுகள் கயிற்றில் கட்டப்படாமல் மேய்ச்சலுக்கு விடப்படுகின்றன.

மேலும் படிக்க...

அங்கக வேளாண்மையில் காய்கறி உற்பத்திக்கு மானியம்!

வெட்டுக்கிளித் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பாற்றுவது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)