மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 November, 2020 10:19 AM IST
Credit : IndiaMART

மழையில் நனைந்த உலர் தீவனங்களை (Livestock) எக்காரணம் கொண்டும், கால்நடைகளுக்குக் கொடுக்கக்கூடாது என கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு நச்சுயிரிகள், நுண்ணுயிரிகள் மற்றும் ஒட்டுண்ணிகளால் பாதிப்பு ஏற்படும். தீவனத்தில் பூஞ்சான் தொற்று ஏற்படுவதால் செரிமானக் குறைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குடற்புழுக்கலால் ரத்தசோகை ஏற்படலாம். கொட்டகை மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கி நிற்ப்தால், கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி தொற்று ஏற்படக்கூடும்.

சினை மாடுகள், கன்றுக்குட்டிகள், ஆட்டுக்குட்டிகள் ஆகியவை மழை காலங்களில் அதிக பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.

இதனைத் தவிர்க்க பின்வருபவற்றைப் பின்பற்றுமாறு கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

  •  மழையில் நனைய விடாமல் கொட்டகையில் கால்நடைகளைக் கட்டி வைக்க வேண்டியது அவசியம்.

  • கொட்டகையின் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காயமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

  • தொற்று நோய்கள் வராமல் தடுக்க தடுப்பூசி போட வேண்டும்.

  • குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

  • நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக கால்நடை மருத்துவரை அணுக வேண்டும்.

  • காலை, மாலை வேளைகளில் மாட்டின் மடியை சுத்தமாகக் கழுவியப் பிறகே பால் கறக்க வேண்டும்.

  • வைக்கோல், சோளத்தட்டு, காய்ந்தக் கடலைக்கொடி போன்றவற்றை மழையில் நனையாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

  • மழையில் நனைந்த உவர் தீவனங்களைக் கட்டாயமாக கால்நடைகளுக்கு வழங்கக்கூடாது.

  • புண்ணாக்கு, சோளத்தட்டு வழங்கும் போது, நன்றாக காய்ந்திருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

  • மேலும் குச்சிக்கிழங்கு திப்பியை வழங்குவதால், மாடு விரைவில் உயிரிழக்க வாய்ப்புகள் உள்ளன.

மேலும் படிக்க..

80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!

ஆவின் நிறுவனத்தில் வேலை- ரூ.50,000 வரை ஊதியம்!

அழகுக்கும் கழுதைக்கும் ஆயிரம் சம்மந்தம் - தெரியுமா உங்களுக்கு!

English Summary: Dry fodder soaked in rain should not be given to livestock- Veterinarian's advice!
Published on: 24 November 2020, 10:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now