மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 12 April, 2021 11:02 AM IST
Credit: PETA India

சோயாப் புண்ணாக்கு விலை இருமடங்கு உயர்வால், கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோழிப்பண்ணைகள் (Poultry farms)

திருப்பூர் மாவட்டம், பல்லடம் பகுதியில், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இங்கு வாரந்தோறும், 10 லட்சம் கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

முக்கியத் தீவனம் (Main fodder)

அவ்வாறு இங்கு உற்பத்தியாகும் கோழிகளுக்கு சோயாப் புண்ணாக்குதான் முக்கிய தீவனம்.
எனவே இப்பகுதியைச் சேர்ந்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள், கிலோக்கணக்கில் சோயாப் புண்ணாக்கை வாங்கி இருப்பு வைத்துக்கொண்டு, கோழிகளுக்கு இரையாக வழங்குவது வழக்கம்.

விலை உயர்வு (increase in price)

ஆனால் தற்போது சோயாப் புண்ணாக்கின் விலை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், கோழிப்பண்ணையாளர்கள் கூடுதல் செலவு செய்ய வேண்டியத் தவிப்பில் உள்ளனர்.

உற்பத்தியாளர்கள் பாதிப்பு (Vulnerability of manufacturers)

இது குறித்து கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கூறுகையில்,

கடந்த ஜனவரி மாதம் கிலோ, ரூ.35க்கு விற்பனை செய்யப்பட்ட இருந்த சோயா புண்ணாக்கு தற்போது, ரூ.68 ஆக உயர்ந்துள்ளது. இதரத் தீவனங்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

தமிழகத்தில் தீவனத்தின் உற்பத்தி மேற்கொள்ள நடவடிக்கைத் தேவை. எனவே தீவனங்களின் விலை உயர்வால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


கோழி விலை உயரும் (Poultry prices will rise)

தீவனங்களை விலை இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதால், வரும் நாட்களில் கோழிகளின் விலையும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க...

அரசின் இலவச வெள்ளாடு திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

English Summary: Echo of rising cake prices - Risk of rising chicken prices!
Published on: 12 April 2021, 10:58 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now