மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 November, 2021 9:40 AM IST
Credit : Dinamalar

சென்னையில் பெய்த அதி கனமழையின்போது, மின்சாரம் பாய்ந்து மாடுகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

வெள்ளக்காடானது (Flooded)

அடுத்தடுத்து உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்  காரணமாக, 
சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது. இந்தக் கனமழையால் நகரின் பலப் பகுதிகள் தண்ணீரில் மூழ்கி வெள்ளக்காடாகக் காட்சியளிக்கின்றன.ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கிக் கிடக்கிறது. இதனால், நோய்த்தொற்று பரவும் அபாயம் அதிகமாகியிருக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தேங்கி நின்ற மழைநீர் (Rain Water) மற்றுமொரு சோகச் சம்பவத்துக்கு காரணமாகியிருக்கிறது. மழைநீரில் கால் வைத்த கால்நடைகள் மின்சாரம் தாக்கி பலியாயின.

கால்நடை விவசாயி

சென்னையில் தாழ்வான பகுதியான மேடவாக்கத்தைச் சேர்ந்த பால் வியாபாரி ஆதிகேசவன். இவருக்கு வாழ்வாதாரமே அவர் வளர்த்து வரும் மாடுகள்தான். ஆதிகேசவனின் ஐந்து கறவை மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டன. ஆனால், சரியான நேரத்தில் எச்சரிக்கை செய்யப்பட்டதால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.

மழையால் நிகழ்ந்த துயரம்

கனமழை மற்றும் வெள்ளத்திற்கு மத்தியில் கால்நடைகளை இழந்து வருத்தத்தில் ஆழ்ந்துள்ள ஆதிகேசவனைப் போல மழையினால் பலரும் தங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய துயரங்களை அனுபவித்து வருகின்றனர்.
தேங்கி நிற்கும் மழை நீரில் (Chennai Rain) மின்சார கேபிள் விழுந்துவிட்டதாக மேடவாக்கம் பாபு நகரில் வசிப்பவர்கள் புகார் தெரிவித்தனர்.

இந்த விஷயம் சிறிது நேரத்தில் அருகில் இருந்தவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. விஷயம் தெரிந்த பால் விற்பனையாளர் ஆதிகேசவன் தண்ணீரில் இறங்காமல் ஒதுங்கி நின்றார். ஆனால், அவரது கால்நடைகள் தண்ணீரில் கால் வைத்ததுமே, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.

மின்சாரம் துண்டிப்பு

இதைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் மற்றும் மின்சாரத் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இறந்த மாடுகளின் சடலங்களும் மீட்கப்பட்டன.
மழை, பெய்யும் போது மட்டுமல்ல, அதன் பிறகும், பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பதற்கு கறவை மாடுகள் பலியாகியிருப்பதும் சிறந்த உதாரணம்.

மேலும் படிக்க...

இன்றும் நாளையும் மிக கன மழை எச்சரிக்கை- சென்னைக்கு ரெட் அலர்ட்!

Freezer Boxல் வைக்கப்பட்ட உடல்: 7 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் இருந்த அதிசயம்!

English Summary: Electricity kills cows - Heavy rain awful!
Published on: 22 November 2021, 09:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now