நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 May, 2022 5:34 PM IST
Government publishes report on livestock and poultry of the 20th Livestock Survey...

இந்த கண்டுபிடிப்புகள் 2018-19 கால்நடை கணக்கெடுப்பின் போது பெறப்பட்ட இனம் சார்ந்த தரவுகளின் அடிப்படையில் அமைந்துள்ளது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா (12-05-2022) வியாழக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர், டேப்லெட் கம்ப்யூட்டர்களை அரசாங்கம் பயன்படுத்தியது முதல் தடவையாகும், மேலும் கால்நடைகள் மற்றும் கோழிப் பறவைகள் தேசிய விலங்கு மரபியல் வளப் பணியகத்தால் (NBAGR) அங்கீகரிக்கப்பட்ட இனங்களின்படி கணக்கிடப்பட்டது என குறிப்பிட்டார்.

கால்நடைத் தொழிலின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு இனங்களை அடையாளம் காண வேண்டும், இதனால் இனங்கள் அதிகபட்ச தயாரிப்பு செயல்திறனுக்கும், பிற நோக்கங்களுக்கும் பயன்படும் என புதுப்பிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

NBAGR இந்த அறிக்கையில், 184 அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு/வெளிநாட்டு மற்றும் 19 வெவ்வேறு கலப்பின இனங்கள் இருப்பதாக அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நான்கு அயல்நாட்டு/கலப்பின மாட்டு இனங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட 41 உள்நாட்டு இனங்களை உள்ளடக்கியதாகும். கணக்கெடுப்பின்படி கால்நடைகளின் எண்ணிக்கை 36.04 சதவீதம் ஆகும்.

மொத்த அயல்நாட்டு/கலப்பின கால்நடைகளில், கிராஸ்பிரெட் ஹோல்ஸ்டீன் ஃப்ரீசியன் (எச்எஃப்) க்கு 49.3% மற்றும் 39.3% உடன் கிராஸ்பிரெட் ஜெர்சி மிகப்பெரிய விகிதத்தைக் கொண்டுள்ளது. 14.21 கோடி உள்நாட்டு கால்நடைகளில் கிர், லக்கிமி மற்றும் சாஹிவால் இனங்கள் பெரும்பான்மையாக உள்ளன. உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் பிரபலமான, முர்ரா இனமானது 42.8 சதவீத இனப்பெருக்கம் செய்கிறது.

செம்மறி ஆடுகளைப் பொறுத்தவரை, தேசத்தில் மூன்று அயல்நாட்டு வகைகள் மற்றும் 26 உள்நாட்டு இனங்கள் உள்ளன. கொரிடேல் இனமானது மிகவும் பொதுவான தூய அயல்நாட்டு இனமாகும், இது மொத்தத்தில் 17.33% ஆகும், நெல்லூர் இனமானது மிகவும் பொதுவான உள்நாட்டு இனமாகும், மொத்தத்தில் 20% ஆகும்.

28 உள்நாட்டு ஆடு இனங்கள் உள்ளன, இதில் பிளாக் பெங்கால் இனம் அதிக பங்களிப்பை அளிக்கிறது (18.6%). பன்றிகளில், கலப்பினப் பன்றிகள் மொத்தத்தில் 86.6 சதவிகிதம் ஆகும், யார்க்ஷயர் 8.4 சதவிகிதம் மற்றும் உள்நாட்டுப் பன்றிகள் 3.9 சதவிகிதம் ஆகும்.

அசீல் இனமானது நாட்டுக் கோழிகளில் கொல்லைப்புறக் கோழிப்பண்ணை மற்றும் வணிகக் கோழிப் பண்ணைகள் இரண்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது என்பது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க:

2019 ஆம் ஆண்டிற்கான கால்நடைப் பராமரிப்பு சார்ந்து அறிவிக்கப்பட்ட திட்டங்களும், அதன் செயல்பாடுகளும்

English Summary: Government publishes report on livestock and poultry of the 20th Livestock Survey.
Published on: 13 May 2022, 05:34 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now