சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2025- 26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு கூடுதல் நிதி கேட்கும் வேளாண் அமைச்சகம் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் பரிதாப நிலையில் பருத்தி சாகுபடி!பயிர் பாதிப்பால் விரக்தியில் டெல்டா விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் மறுபடியும் பசுமை வழி சாலையா! கொந்தளிக்கும் கோவை விவசாயிகள் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் இரண்டு மாவட்ட விவசாயிகளுக்கு அரசு வெளியிட்ட குட் நியூஸ் தமிழக வேளாண் பட்ஜெட்டில் மா விவசாயம் புறக்கணிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் வேதனை ஏழு புதிய விதை சுத்திகரிப்பு நிலையங்கள் : வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு ராஜஸ்தான் பெண் விவசாயி, இயற்கை பயிர்களை பயிரிட்டு, சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயத்தை ஊக்குவிப்பதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.50 லட்சம் சம்பாதிக்கிறார். சாமந்தி மற்றும் கிளாடியோலஸ் சாகுபடி மூலம் ஆண்டுதோறும் சுமார் ரூ.18 லட்சம் சம்பாதிக்கும் சத்தீஸ்கர் விவசாயி
Updated on: 6 November, 2021 8:06 AM IST
Poultry farms also need pesticides - tactics used!
Credit : Dinamalar

கோழிப்பண்ணைகளில் லாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகளில் கிருமிநாசினித் தெளிப்பும் முக்கிய இடம் வகிக்கிறது.

கோழிப்பண்ணை (Poultry farm)

எனவே இந்தக் கிருமி நாசினியைப் பயன்படுத்தும் முறைகள் குறித்துத் தெளிவாகத் தெரிந்துவைத்துக்கொள்வது அவசியமான ஒன்று. கால்நடைகளிடத்தில் அதிக அன்பைக் கொட்ட விரும்பும் நபர்களுக்குக் கைகொடுக்கும் லாபகரமானத் தொழில்களில் கோழிப்பண்ணையும் ஒன்று.

பராமரிப்பு (Maintenance)

இந்தத் தொழிலைப் பொருத்தவரை, கோழிகள் வளர்ப்பு எவ்வளவு முக்கியமோ, அதைவிட இன்றியமையாதது பண்ணைப் பராமரிப்பு. அந்தப் பராமரிப்பில் முக்கிய இடம் பிடிப்பது, கிருமி நாசினித் தெளிப்பு. ஏனெனில், கோழிப் பண்ணை உள்ளப் பகுதிக்கு வரும்போதே மூக்கை மூடிக்கொள்ளும் அளவுக்கு நாற்றம் மூக்கைத் துளைக்கும்.

கோழிப்பண்ணையை வருமானம் ஈட்டக்கூடியதாக மாற்றுவதற்கு,
சரியானத் திட்டமிடல், பண்ணை பதிவேடுகள் ஆகியவை மிகவும் அவசியம்.
அதுவும் தொகுதி முறையில் வளர்க்கப்படும் பண்ணைகளில் கோழிகளை விற்பனை செய்தபின் கிருமிநாசினி தெளிக்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

எச்சங்கள்(Remnants)

பண்ணையில் உள்ளக் கோழிகளை வெளியேற்றியவுடன் பண்ணையின் உட்புறத்தில் சிலந்தி பூச்சிகள், கரையான் மற்றும் கரப்பான்பூச்சிகளின் கூடு அவற்றின் எச்சங்களை நீக்க வேண்டும்.பரிந்துரைக்கபட்ட பூச்சி நாசினியினைத் தெளிக்க வேண்டும்.

பார்மல்டீஹைடு புகைமூட்டத்தைத் தூய்மை செய்வதற்கு முன்னும் பூச்சிநாசினியை 2-வது முறையாகத் தெளிக்க வேண்டும்.எல்லா உபகரணங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். தானியங்கி தீவனம் மற்றும் தண்ணீர் பாத்திரங்களை மேலே கட்டி தொங்க விட வேண்டும்.

2 கி.மீ. தொலைவில் (2 km In the distance)

கோழி எச்சங்களைப் பண்ணையிலிருந்து குறைந்தது 2 கி.மீ. தொலைவில் கொண்டு சென்று அரசு விதிகளின் படி அழிக்க வேண்டும்.
தண்ணீர், தீவன உபகரணங்களை கிருமிநாசினியால் சுத்தம் செய்து உலற வைக்க வேண்டும்.

பூஞ்சைகள் தொற்று இருக்கக்கூடாது. தண்ணீர் குழாய்களில் வளரும் கிருமிகளை நீக்க அவற்றை ஒவ்வொருமுறை கோழிகளை எடுத்த பின்பும் சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு சுத்தம் செய்ய முடியாவிடில் அதிக அளவில் குளோரினை (140 பிபிஎம்) பயன்படுத்த வேண்டும்.அந்த நீரை வெளியேற்றி கோழி கூட்டம் வருவதற்கு முன் சுத்தமான நீரை குழாயினுள் செலுத்த வேண்டும்.

கிருமிநாசினி (Disinfectant)

பெரியத் தீவன தொட்டிகள், இணைப்பு குழாய்களைச் சுத்தம் செய்து எல்லா துவாரங்களையும் மூட வேண்டும். தேவையான இடங்களில் புகையூட்டி சுத்தம் செய்யலாம். குறிப்பிட்டக் கோழிகளை தாக்ககூடிய நுண்ணுயிரிகளை அழிக்கும் சரியான கிருமிநாசினியை பயன்படுத்துவது அவசியம்.

ரத்த கழிச்சல்

எல்லா வகையான கிருமி நாசினிகளும் ரத்த கழிச்சல் ஏற்படுத்தும் முட்டைகளை அழிக்காது. எனவே அவற்றைப் பயிற்சி பெற்ற பணியாளர்களை கொண்டு அழிக்க வேண்டும். கிருமிநாசினியை பயன்படுத்தும் போது உடனுக்குடன் புகையூட்ட வேண்டும்.

வெப்பநிலை

தரை ஈரப்பதமாகவும் கோழிப்பண்ணை அதிகபட்சமாக 65 சதவீதம் கொண்ட வெப்பநிலை இருக்கும் இடங்களில் புகையூட்டி சுத்தம் செய்தல் வேண்டும்.
கோழிகள் திரும்பி வரும்முன் பண்ணையில் உள்ள காற்றில் பார்மலின் அளவு 2 (பிபிஎம்) ஆக குறைந்து காற்றோட்ட வசதி ஏற்படுத்த வேண்டும்.

தரையில் ஆல்கூலம் பரப்பிய பிறகு, மறுமுறை புகையூட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். பண்ணையின் வெளிப்புறப் பகுதியை சுத்தம் செய்ய மறக்கக்கூடாது. பண்ணையைச் சுற்றி கான்கிரிட்டால் அல்லது கூழாங்கற்களால் ஆன பகுதிகளை அமைக்க வேண்டும். அவை பக்கவாட்டில் 3-10 அடி உயரம் இருக்க வேண்டும்.


அவ்வாறு இல்லாத இடங்கள், புற்கள் மற்றும் இயந்திரங்கள் இல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக அவை சமமான, நீரோட்ட வசதியுள்ள தரையாக இருக்க வேண்டியது முக்கியம்.

தகவல்
பார்த்திபன்,
கால்நடை மருத்துவர்
கோழியினத் துறை,
விருதுநகர்

மேலும் படிக்க...

முதன்முறையாக கால்நடைகளுக்கான எரிவாயு தகன மேடை: சென்னையில் திறப்பு!

மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிக்க ஆடு வளர்ப்பு! 90% வரை அரசாங்கம் மானியம்

English Summary: How to make a profit on a poultry farm? Some tricks!
Published on: 06 November 2021, 08:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now