மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 November, 2022 2:26 PM IST
Bee Keeping

புதுக்கோட்டை மாவட்டம் குடுமியான் மலையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. தொழில் முனைவோர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் கல்லூரியில் பயிலும் இரண்டாம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கு தேனீ வளர்ப்பு குறித்த திறன் மேம்பாடு மற்றும் செய்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

தேனீ வளர்ப்பு பயிற்சியாளர்கள் குணசேகரன் மற்றும் மாரியம்மாள் இருவரும் தேனீ வளர்ப்பு குறித்த தகவல்கள் மற்றும் களப் பயிற்சிகளை, செய்முறைகளாக மாணவர்களுக்கு வழங்கினர்.அதேபோல் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தையும் தேனீ வளர்ப்புக்கான பண்ணைகள் அமைத்தால் அதன் மூலம் பயிர்களுக்கு மகரந்த சேர்க்கை அதிகரித்து மகசூல் அதிகமாக கிடைக்கும் என்ற ரகசியத்தையும் மாணவர்களிடையே பகிர்ந்தனர்.

தேனி மற்றும் அதன் சார்பு பொருட்கள் மூலம் அதிக லாபம் பெறும் வழிகளும் செயல்முறை மூலம் எடுத்துரைக்கப்பட்டது. மிகவும் ஆர்வத்துடன் இந்த செய்முறை மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சியை மாணவர்கள் கவனித்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு வேளாண் கல்லூரி முதல்வர் முனைவர் சே.நக்கீரன் அவர்கள் தலைமையேற்று சிறப்பித்தார். இந்த செயல்முறை நிகழ்ச்சி மாணவ மாணவிகளிடையே தொழில் முனைவோர் ஆகும் எண்ணத்தை ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக அமைந்தது என அதில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க:

ரூ.35,000 பென்ஷன்: திட்டம் பற்றி தெரியுமா?

கல்வி உதவித்தொகை பெற என்ன செய்ய வேண்டும்?

English Summary: Increase crop yield with beekeeping! Detail
Published on: 23 November 2022, 07:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now