மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 June, 2021 10:55 AM IST

கரூர் அடுத்த க.பரமத்தியில், கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்துடன் கூடிய ஆடு ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டும் என, கால்நடை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கால்நடை வளர்ப்பு

கரூர் மாவட்டத்தில், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில், மானாவாரி நிலங்கள் மூலம் விவசாய வேளாண் பணிகள் நடைபெற்று வருகின்றன, அமராவதி ஆறு, மழை, கிணற்று நீரை நம்பிதான் விவசாயம் நடக்கிறது. அமராவதி ஆற்றில், தண்ணீர் இல்லாதபோது, மழை தான் மானாவாரி நிலங்களுக்கு கைகொடுக்கிறது. இதனால், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஒன்றிய பகுதிகளில் ஆடு வளர்ப்பு தொழில் முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக, இந்த பகுதிகளில், 1.25 லட்சம் மேச்சேரி இன ஆடுகள் வளர்க்கப்படுகின்றன. பருவநிலை மாற்றம் காரணமாக, ஆடுகளுக்கு பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

விவசாயிகள் கோரிக்கை

இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது, மாவட்டத்தின் மேற்கு பகுதியான மொஞ்சனூரில் உள்ள, எல்.பி.பி., பாசன திட்டத்தை தென்னிலை வரை நீடித்தால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்புக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.

 

மேலும், தட்ப வெப்பநிலை மாற்றம் காரணமாக, நோய்த்தொற்று ஏற்பட்டு, ஆடுகள் அடிக்கடி இறக்கின்றன. இதனால், கால்நடை ஆம்புலன்ஸ் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்றும், இதனால், ஆடுகளுக்கு ஏற்படும் நோயை உடனடியாக கண்டறிந்து, சிகிச்சையளிக்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். உடனடியாக, ஆடுகள் ஆராய்ச்சி நிலையத்தை, க.பரமத்தியில் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க...

எளிய பராமரிப்பு, அதிக இறைச்சி, நிறைவான லாபம் - முயல் வளர்ப்பு!!

English Summary: Karur Farmers Request Goat Research Station with Veterinary Ambulance
Published on: 07 June 2021, 10:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now