Animal Husbandry

Monday, 15 November 2021 08:50 PM , by: R. Balakrishnan

Compost from Cow Dung

உரங்கள் (Fertilizer) உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க, பசுஞ்சாணத்தை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என, மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தெரிவித்தார்.

பசுஞ்சாணத்தில் உரம்:

ம.பி.,யில் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. தலைநகர் போபாலில் கால்நடை மருத்துவர்கள் சங்கம் சார்பில் 'ஷக்தி ௨௦௨௧ (Sakthi 2021)' என்ற தலைப்பில் மாநாடு நடந்தது. இதில் சிவ்ராஜ் சிங் சவுகான் பேசியதாவது: பசுவிடமிருந்து கிடைக்கும் அனைத்தும் மருத்துவக் குணம் மிக்கவை. பசுவின் சாணம், சிறுநீரிலிருந்து உரங்கள், பூச்சி மருந்துகள், மருந்துகள் உள்ளிட்ட பல பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.

மாநில அரசு சார்பில் உரங்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க பசுஞ்சாணத்தை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கால்நடைகள் பல்வேறு நோய்களின் பாதிப்புக்கு உள்ளாகின்றன. இவற்றை தடுக்க, ஆம்புலன்ஸ் சேவை (Ambulance Service) துவக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று அவர் பேசினார்.

மேலும் படிக்க

கால்நடைகளில் கோமாரி நோயைக் கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை!

கலப்பின பசுக்கள் அதிகரிப்பு: அச்சத்தில் விவசாயிகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)