Animal Husbandry

Thursday, 15 October 2020 10:39 AM , by: Elavarse Sivakumar

மாடுகளைத் தாக்கும் நோய்களில் முக்கியமானதாகக் கருதப்படும் மடிநோய்க்கு இயற்கை முறையில் மருந்து தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள் (Ingredients)

சோற்றுக்கற்றாழை    - 250 கிராம்,
மஞ்சள்                       - 50 கிராம்
(கிழங்கு அல்லதுபொடி,)
சுண்ணாம்பு               - 15 கிராம்,
எலுமிச்சை                 - 2,
வெல்லம்                    -100 கிராம்

தயாரிப்புமுறை  (Preparation)

முதல் மூன்று பொருட்களையும் சேர்த்து சிவப்பு பசைபோல, அரைத்துக்கொள்ளவும். இரண்டு எலுமிச்சையையும் இரண்டாக நறுக்கவும்

பயன்படுத்தும் முறை (Using Method)

  • அரைத்த கலவையை ஒரு கையளவு எடுத்து அதனுடன் 150-200 மிலி தண்ணீர் சேர்த்துக் கலக்கவும் மடியைக் கழுவி சுத்தம் செய்து, மடி முழுவதும் கலவையைத் தடவி விடவும்.

  • மீண்டும் இதே முறையை என நாள் ஒன்றுக்கு,10 தடவை வீதம், 5நாட்களுக்கு செய்ய வேண்டும்.

  • தினமும் இரண்டு எலுமிச்சையை ஒரு நாளுக்கு இருமுறை வீதம் 3 நாட்களுக்குக் கொடுக்கவும்

  • பாலில் இரத்தம் வந்தால் மேற்கண்டவற்றுடன், இரண்டு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் வெல்லம் இரண்டையும் பசையாக அரைத்து, வாய் வழியாக ஒரு நாளுக்கு இரண்டுமுறை நிலைமை சீரடையும் வரை கொடுக்கவும்.

  • இந்த மருந்து மடிநோய்க்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

மேலும் படிக்க...

கால்நடைத் தீவனங்களுக்கு பூஞ்சான் நச்சு பரிசோதனை அவசியம்!

கால்நடைகளை கட்டிப்போடாமல், மேய்ச்சலுக்கு விடும் இடம் எது தெரியுமா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)