Animal Husbandry

Wednesday, 27 January 2021 05:51 PM , by: KJ Staff

Credit : Dinamalar

தீவிரமாக பரவி வரும் அம்மை நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர், கோவை மாவட்டத்தில் விவசாய தொழிலுடன் கால்நடை வளர்ப்பு (Livestock) தொழிலும் பிரதானமாக உள்ளது. இதனை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள், கால்நடைகளுக்கு ஏற்படும் அம்மை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழியின்றி திணறி வருகின்றனர்.

விவசாயிகள் கூறியது

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டுமே கால்நடைகளை தாக்கும் அம்மை நோய் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற் போது அனைத்து பகுதியிலும் பரவுகிறது. இதனால், கால்நடைகள் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றன. கொப்புளம், தோலில் புண்கள் ஏற்பட்டு, சீழ், ரத்தம் வடிதல் ஆகியவற்றால் கால்நடைகள் மிகவும் சோர்வடைந்து, சாப்பிட இயலாத நிலைக்கு தள்ளப்படுகின்றன. கடந்த வாரம் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடை ஒன்றின் மூலம் ஆறு கால்நடைகளுக்கு நோய் பரவியது. இதில், கன்றுக்குட்டி ஒன்று ஆறாத புண்களால் அவதிப்பட்டு இறந்தது.

சிகிச்சை

சிகிச்சைக்காக தடுப்பூசி (Vaccine), மருந்து என, செலவு செய்தும் பயனில்லை. எலுமிச்சை, வெற்றிலை, மஞ்சள் (turmeric) என நாட்டு மருந்துகளையும் பயன்படுத்தினோம்.இருந்தும், நோயின் தாக்கம் குறையவில்லை. எனவே, அம்மை நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்த்தால், கூடுதல் இலாபம்!

டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி! அமைதியாக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை! 144 தடை உத்தரவு

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)