மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 January, 2021 5:52 PM IST
Credit : Dinamalar

தீவிரமாக பரவி வரும் அம்மை நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர். திருப்பூர், கோவை மாவட்டத்தில் விவசாய தொழிலுடன் கால்நடை வளர்ப்பு (Livestock) தொழிலும் பிரதானமாக உள்ளது. இதனை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகள், கால்நடைகளுக்கு ஏற்படும் அம்மை நோய் தாக்குதலை கட்டுப்படுத்த வழியின்றி திணறி வருகின்றனர்.

விவசாயிகள் கூறியது

கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் மட்டுமே கால்நடைகளை தாக்கும் அம்மை நோய் இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தற் போது அனைத்து பகுதியிலும் பரவுகிறது. இதனால், கால்நடைகள் மிக கடுமையாக பாதிக்கப்படுகின்றன. கொப்புளம், தோலில் புண்கள் ஏற்பட்டு, சீழ், ரத்தம் வடிதல் ஆகியவற்றால் கால்நடைகள் மிகவும் சோர்வடைந்து, சாப்பிட இயலாத நிலைக்கு தள்ளப்படுகின்றன. கடந்த வாரம் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடை ஒன்றின் மூலம் ஆறு கால்நடைகளுக்கு நோய் பரவியது. இதில், கன்றுக்குட்டி ஒன்று ஆறாத புண்களால் அவதிப்பட்டு இறந்தது.

சிகிச்சை

சிகிச்சைக்காக தடுப்பூசி (Vaccine), மருந்து என, செலவு செய்தும் பயனில்லை. எலுமிச்சை, வெற்றிலை, மஞ்சள் (turmeric) என நாட்டு மருந்துகளையும் பயன்படுத்தினோம்.இருந்தும், நோயின் தாக்கம் குறையவில்லை. எனவே, அம்மை நோயை கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.இவ்வாறு, அவர்கள் கூறினார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

கூண்டு முறையில் நாட்டுக்கோழி வளர்த்தால், கூடுதல் இலாபம்!

டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி! அமைதியாக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை! 144 தடை உத்தரவு

English Summary: Measles spreads to livestock Farmers demand action during the war!
Published on: 27 January 2021, 05:52 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now