மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 February, 2021 4:38 PM IST

நாமக்கல் மாவட்டத்தில் கால்நடை சார்ந்து தொழில் தொடங்குவதற்கும், பால், இறைச்சி, தீவன பதப்படுத்தும் தொழில் செய்வதற்கும், விரிவாக்கம் செய்திடவும் மானியம் வழங்கப்படும் என கால்நடைத்துறை அறிவித்துள்ளது.

கால்நடை தொழிலுக்கு மானியம்

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாமக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் விவசாய உற்பத்தியாளா் அமைப்புகள், தொழில் முனைவோா்கள், தனியாா் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு பால், இறைச்சி மற்றும் தீவன பதப்படுத்தும் அலகுகள் அமைத்திடவும், தொழில் விரிவாக்கம் செய்திடவும் நிதியுதவி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்புவோா் உரிய திட்ட அறிக்கையுடன் விண்ணப்பிக்கலாம்.

90% வரை கடன் வசதி

தகுதியின் அடிப்படையில் மொத்த திட்ட மதிப்பில் 90 சதவீதம் வங்கி கடன் பெறும் வசதி உள்ளது. இதில் நிறுவனங்களின் பங்களிப்பு தொகையானது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரையிலும், இதர நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரையிலும் ஆகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோா் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குநா் அலுவலகத்தைத் தொடா்பு கொள்ளலாம். மேலும், இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

மாடுகளின் வயதை எப்படி கண்டுபிடிப்பது? எளிய வழி அறிவோம்!

மாடுகளில் உண்ணிகளைக் கட்டுப்படுத்தும் பல்மூலிகை மருந்து!

மாடுகளுக்கானக் கோடை காலப் பராமரிப்பு! எளிய டிப்ஸ்!

English Summary: Namakkal Animal Husbandry department has announced that subsidy will be granted to start a new livestock based business and also to expand the dairy, meat and fodder processing industry
Published on: 17 February 2021, 04:38 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now