மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 15 November, 2018 5:41 PM IST

தயாரிப்பு முறை

இயற்கை பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்டவை. உதாரணமாக : சுரக்காய், அதிமதுரம், வேப்பங் கொட்டை மற்றும் பட்டை மற்றும் நிறமி, பதப்படுத்துதல் போன்றவைகளுக்காகவும் சில வகையான உப்பு போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

பயன்படுத்தும் முறை

ஒவ்வொரு பூச்சிகளுக்கும், இடத்திற்குத் தகுந்தாற்போல் பயன்படுத்த வேண்டும். முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது ஸ்பிரே செய்யும் தொழில்நுட்பமே சிறந்த பொருளாதார பலனளிக்கும். (இவை பெரிய பண்ணைகளுக்கும் பொருந்தும்).

தெள்ளுப் பூச்சிக்கு  – 1 மி.லி Dr.Fly, 7 மி.லி தண்ணீர்.

ஈக்கள்     – 1 மி.லி Dr.Fly,10 மி.லி தண்ணீர்.

கால்நடைகள் மீது ஸ்பிரே செய்யும் பொழுது 1 பங்கு Dr.Flyக்கு 7 பங்கு தண்ணீரும், தரை துடைப்பதற்கு 1 பங்கு Dr.Flyக்கு 10 பங்கு தண்ணீரும்  பயன்படுத்த வேண்டும்.

மேலும், தினந்தோறும் அல்லது அடிக்கடி சுத்தம் செய்யும் இடங்களில் உதாரணமாக ஹோட்டல் போன்ற இடங்களில் 10 மி.லி Dr.Flyக்கு 300 மி.லி தண்ணீர் கலந்து பயன்படுத்த வேண்டும். சுத்தம் செய்யப்படாத இடங்களில் ஸ்பிரே செய்தால் 1 வாரம் வரை இதன் பயன் இருக்கும். உதாரணமாக, கால்நடைப் பண்ணைகளில் தரையைத் தினந்தோறும் சுத்தம் செய்வோம், ஆனால் அதன் சுவர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே சுத்தம் செய்வோம்.  இதுபோன்ற இடங்களில் ஸ்பிரே செய்யலாம். இந்த முறையை பயன்படுத்துவதால் பூச்சிகள் உடனடியாகக் கொல்லப்படுகின்றன.

முக்கிய கவனத்திற்கு

வேதிப் பொருட்கள் பயன்படுத்திய இடங்களில் வேலை செய்வதில்லை.

முன்பு பயன்படுத்தியிருந்தால் தண்ணீரில் முழுமையாகச் சுத்தம் செய்த பிறகே இதனைப் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொறு முறையும் பயன்படுத்திய பின்பும் குப்பியை நன்கு மூடி வைக்க வேண்டும். திறந்து வைப்பதனால் பூஞ்சாணம் உருவாகி கெட்டுப்போய்விடுகின்றது.

பயன்கள்

கரப்பான் பூச்சி, ஈ. உண்ணி, பேன், செதில் பூச்சி, தெள்ளுப் பூச்சி போன்றவைகள் மீது தெளித்தாலோ அல்லது தெளிக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தாலோ பூச்சிகள் இறந்துவிடுகின்றன.

தொடர்ந்து பயன்படுத்துவதால் கால்நடைகளுக்கு எந்தத் தொற்று நோயும் ஏற்படுவதில்லை. இதற்குக் காரணம் கால்நடைகளைத் தாக்கும் பூச்சிகள் கொல்லப்படுகின்றன.

வீட்டில் வளர்க்கும் நாட்டுக் கோழிகள், வாத்துகள் போன்றவைகளுக்கும் பயன்படுத்தலாம்.

English Summary: Natural Insecticide Uses
Published on: 15 November 2018, 05:40 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now