மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 October, 2021 2:39 PM IST
New product to protect pollinating bees from pesticides!

புவி வெப்பமடைதல், வறட்சி, வாழ்விட இழப்பு, காட்டுத் தீ ஆகியவை தேனீக்களுக்கு முக்கிய அச்சுறுத்தலாகும், அதேசமயம் உலகெங்கிலும் உள்ள பூச்சிக்கொல்லி விளைவுகளால் மில்லியன் கணக்கான தேனீக்கள் எண்ணிக்கையில் வீழ்ச்சியடைகின்றன. தாவரங்கள், செடிகளில் உள்ள பூச்சிகளைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் முறையான பூச்சிக்கொல்லிகள் கூட தேனீக்களை எதிர்மறையாக பாதிக்கின்றன.

கொலம்பிய விஞ்ஞானிகள் தேனீக்களை காப்பாற்றுவதன் விளைவாக ஒரு பரிசோதனையை மேற்கொண்டுள்ளனர். பொகோட்டாவின் ரொசாரியோ பல்கலைக்கழகத்தில் உள்ள இயற்கை அறிவியல்  ஆராய்ச்சியாளர்கள், பூச்சிக்கொல்லிகளின் பாதகமான விளைவுகளிலிருந்து தேனீக்களைப் பாதுகாக்கும் ஒரு சூப்பர்ஃபுட் கண்டுபிடித்துள்ளனர்.

சூப்பர் ஃபுட்

சூப்பர் ஃபுட் திட அல்லது திரவ வடிவத்தில் பயன்படுத்தப்படலாம் மற்றும் மகரந்தத்திற்காக வரும் தேனீக்களுக்கு அருகில் வைக்கப்படுகிறது. தேனீக்களுக்கு சப்ளிமெண்ட் மூலம் பரிசோதனை செய்யும் முடிவுக்கு ஆராய்ச்சியாளர்கள் வந்தனர். 

ஆர்வமுள்ள விஞ்ஞானிகள் உலகின் மிக முக்கியமான மகரந்தச் சேர்க்கைகளான தேனீக்கள் மற்றும் பம்பல்பீஸ் குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டனர், மேலும் ஆராய்ச்சியாளர்கள் பூச்சிக்கொல்லிகளுக்கு எதிரான தீர்வை அடைவதற்கான இலக்கை அடைந்துள்ளனர், முதலீட்டாளர்கள் இப்போது சந்தைகளுக்கு சூப்பர் ஃபுட்களை உற்பத்தி செய்து விற்பதற்கான முடிவை எடுப்பதற்கான வேலைகளைச் செய்து வருகின்றனர்.

தேனீக்கள்: மிக முக்கியமான மகரந்தச் சேர்க்கைகள்

பழங்கள், கொட்டைகள் மற்றும் காய்கறிகளில் மட்டுமல்ல, இறைச்சி மற்றும் பிற விலங்கு பொருட்களின் உற்பத்தியில் தேனீக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேனீக்கள் மகரந்தச் சேர்க்கையாளர்களாக மனிதர்கள் உண்ணும் உணவின் மூன்றில் ஒரு பங்கிற்கு பங்களிக்கின்றன. அவை பயிர்களை மொட்டுகளிலிருந்து  விளைச்சலாக மாற்றுவதால், மகரந்தச் சேர்க்கை நடைபெறாமல் இருந்தால், அது  உணவுகளின் தரத்தையும் அளவையும் பாதிக்கலாம்.

முந்தைய ஆய்வுகள் பற்றிய அறிக்கைகள் 90 சதவிகித காட்டு தாவரங்கள் மற்றும் 75 சதவிகித பயிர்கள் விலங்குகள் அல்லது மிருகங்களின் மகரந்தச் சேர்க்கையை நம்பியுள்ளன. பூச்சிகளால் எந்த பாதிப்பும் இல்லாமல் பயிர்களை வளர்ப்பதற்கு பூச்சிக்கொல்லிகள் அவசியம் என்றாலும், ரொசாரியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் சோதனை தேனீக்களையும் பாதுகாக்க ஒரு பாதையைத் வகித்துள்ளது.

மேலும் படிக்க...

சூரியகாந்தியைச் சேதப்படுத்தும் கிளிகள்- ஓசை எழுப்பி விரட்டும் விவசாயிகள்!

English Summary: New product to protect pollinating bees from pesticides!
Published on: 13 October 2021, 02:39 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now