மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 December, 2018 4:54 PM IST

மஞ்சள்

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் வாசனைப் பயிர்களில் முக்கியமானதாக கருதப்படும் மஞ்சளை 35 வகையான நூற்புழுக்கள் தாக்குகின்றன. அவற்றுள் வேர்முடிச்சு, குடையும் மற்றும் வேரழுகல் நூற்புழுக்கள் முக்கியமானதாகும். இந்நூற்புழுக்களால் சுமார் 15 சதவீத மகசூல் இழப்பு ஏற்படுகிறது. பூஞ்சாணத்துடன் இணைந்து கிழங்கு அழுகல் கூட்டு நோய் உண்டாக்கும் போது பயிர் இழப்பு பன்மடங்காக இருக்கும்.

அறிகுறிகள்

  • பயிர் வளர்ச்சி குன்றுதல்
  • இலைகள் மஞ்சள் நிறமடைதல்
  • இலைகளின் நுனி மற்றும் விளிம்பு காய்தல்
  • தூர்களின் எண்ணிக்கை குறைதல்
  • உரிய காலத்திற்கு முன்பாகவே பயிர்கள் முதிர்ச்சியடைந்து காய்ந்து பட்டுப்போதல்
  • வேரழுகல்

கட்டுப்பாடு

  • விதைப்புக்கு உபயோகப்படுத்தப்படும் கிழங்குகளை சுடுநீரில் (550 செல்சியஸ்) 10 நிமிடம் வைத்திருத்தல்
  • நன்செய் நிலங்களில் நெல்லுடனும், தோட்டக்கால் நிலங்களில் தானியப் பயிருடனும் பயிர் சுழற்சி செய்தல்
  • கார்போபியூரான் 3ஜி குருணை மருந்தினை நட்ட 3ம், 5ம் மாதத்தில் எக்டர் ஒன்றுக்கு 33 கிலோ என்ற விகிதத்தில் இடுதல்.

பருத்தி

தமிழ்நாட்டில் சாகுபடி செய்யப்படும் வணிகப் பயிர்களில் பருத்தி முதன்மையானதாகும். இப்பயிரைத் தாக்கும் நூற்புழுக்களில் மொச்சை வடிவ நூற்புழு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பருத்தி சாகுபடி செய்யப்படும் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக அதிக அளவில் காணப்படும் இந்நூற்புழு தனித்தும், சில வகையான பூஞ்சாணத்துடன் இணைந்தும் பருத்தியைத் தாக்க வல்லதாகும். இந்நூற்புழுவினால் சுமார் 40 சதவீத விளைச்சல் இழப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறிகள்

  • இலைகள் வெளிர்வடைதல்
  • கிளை மற்றும் சல்லி வேர்கள் குறைவாகக் காணப்படுதல்
  • வேர்களின் உரிய வளர்ச்சி இல்லாதிருத்தல்
  • பயிர் வளர்ச்சி குன்றுதல்
  • பயிர்கள் அழுகி வாடுதல்

கட்டுப்பாடு

  • பருத்தி சாகுபடிக்கு முன்னர் நிலத்தை ஆழ உழுது சுமார் ஒரு மாதத்திற்கு கோடையில் தரிசாக விடவும்
  • சோளப் பயிருடன் சுழற்சி செய்யவும்
  • விதைத்த 15 நாட்களுக்குப் பின்னர் கார்போபியூரான் 3ஜி குருணை மருந்தினை எக்டர் ஒன்றுக்கு 33 கிலோ வீதம் வேரைச் சுற்றி இடவும்
English Summary: Root Knot Nematode management in Cotton and Turmeric
Published on: 07 December 2018, 04:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now