மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 19 January, 2023 7:23 PM IST
Dairy Buisness

மதுரை ஆவின் நகர் பகுதியில் அமைந்துள்ள இடம் தான் ராஜா பால் பண்ணை. இந்த பால் பண்ணை சுமார் 35 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் துணை பேராசிரியராக இருக்கும் அசார் தனது அப்பாவுடன் சேர்ந்து இந்த பால்பண்ணையில் சுமார் ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்டுவதாக தெரிவிக்கிறார்.

ஆரம்ப காலகட்டத்தில் குறைந்த மாடுகளுடன் செயல்பட்டு வந்த இந்த பால்பண்ணையில் தற்போது 40 மாடுகள், 20 ஆடுகள், 100 கோழிகளுடன் செயல்படுகிறது. இங்குள்ள மாடுகளுக்கு தீவனங்கள் திருமங்கலம் பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

மாடுகளுக்கு தினமும் சத்தான உணவுகள் கொடுக்கப்படுகிறது. காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் அடர் தீவனமான தண்ணீரில் உளுந்து, தவுடு, குச்சி, கம்பு, சோளம், புண்ணாக்கு போன்றவற்றை கலந்தும் பசுமை தீவனமான சோள நாத்துக்களையும், உலர் தீவனமாக வைக்கோல் என 3 வகையான தீவனங்களையும் கொடுத்து வருகின்றனர். மேலும் பால்பண்ணை வைப்பது பற்றி இளைஞர்களுக்கு துணை பேராசிரியர் கூறியதாவது, “பண்ணையை பொறுத்தவரையில் உழைக்க வேண்டும். குடும்பத்தோடு சேர்ந்து கடுமையாக உழைத்தால் அதிக லாபத்தை ஈட்ட முடியும். 30 மாடுகள் இருந்தால் ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்ட முடியும்.

இதைவிட அதிகமான லாபம் பெற வேண்டும் என்றால் சொந்தமாக விவசாய நிலம் இருந்தால் அதில் உலர் தீவனம், பசுமை தீவனம் ஆகியவற்றை கொள்முதல் செய்வதன் மூலம் தீவனங்களின் செலவு குறைவதால் இன்னும் லாபத்தை பெற முடியும். இப்போதுள்ள இளைஞர்கள் இந்த தொழிலை செய்தால் நல்ல ஒரு முன்னேற்றத்திற்கு போகலாம். அதில் எந்த ஒரு மாற்றுக்கருத்தும் இல்லை” என்றார்.

மேலும் படிக்க:

குறைந்த விலையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

100 யூனிட் இலவச மின்சாரம் இல்லை

English Summary: So much profit in the dairy industry?
Published on: 19 January 2023, 07:22 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now