Animal Husbandry

Tuesday, 15 March 2022 10:28 AM , by: R. Balakrishnan

Hormone treatment program

காங்கேயம் இன மாடுகளுக்கு சினைபிடிக்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, 'நபார்டு' வங்கி உதவியுடன், 'ஹார்மோன்' சிகிச்சை அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கம்பீரமான காங்கேயம் இன மாடுகள், விவசாய பணிகளுக்கு பிரசித்தி பெற்றவை. நீண்ட இடைவெளிக்கு பின், இவ்வகை மாடு வளர்ப்பு அதிகரித்துள்ளது. தரமான பால் மட்டுமின்றி சாணம், கோமியம் போன்றவையும், விற்பனை பொருளாக மாற்றப்படுகிறது.

காங்கேயம் மாடுகள், எளிதாக சினையாகாமல் இருப்பதும், கன்று ஈனிய பிறகு, பல மாதங்கள் சினை பருவத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதும் சவாலாக மாறியுள்ளது. பால் உற்பத்தி இல்லாததால், மாடுகளை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஹார்மோன் சிகிச்சை (Hormone Treatment)

கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் கூறியதாவது: காங்கேயம் நாட்டு மாடுகள், 16 மாத இடைவெளியில், கன்று ஈன வேண்டும். மாறாக, ஹார்மோன் பிரச்னையால், கன்று ஈனும் இடைவெளி அதிகரிப்பதால், நஷ்டம் ஏற்படுகிறது. சரியான இடைவெளியுடன், கன்று ஈனும் இடைவெளியை பராமரிக்க, ஹார்மோன் சிகிச்சை அவசியம். அதற்காக, நபார்டு வங்கி உதவியுடன் கால்நடைத்துறை சார்பில், சிறப்பு சிகிச்சை அளிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

காங்கேயம் நாட்டு மாடுகள் உள்ள பகுதியில் சிறப்பு பயிற்சியும், சிகிச்சை முகாமும் நடத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் கால்நடை வளர்ப்பவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.

மேலும் படிக்க

மாட்டுத்தீவன மானியம் நிறுத்தம்: அதிர்ச்சியில் பால் உற்பத்தியாளர்கள்!

பசுவில்லாத பால்: அதே மணம், சுவை: உடலுக்கு நல்லதா?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)