மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 22 January, 2022 12:56 PM IST
Status of Fisheries, Accelerated Fish Farming

இந்தியாவில் விவசாயத்துடன், மீன்வள தோழிலை நம்பியிருக்கும் மக்களும் அதிகம். எனென்றால் இந்தியாவை சுற்றி கடலும், மீனை விரும்பி உண்ணும் மக்களும் அதிகம். மேலும் மீன் வளம் ஏற்றுமதியிலும் மேலோங்கி இருக்கிறது. ஆனால் மீன் வளத்தை நம்பியிருக்கும் மக்கள் கவனிக்க வேண்டிய, விஷயங்களும் ஏறலாம் உள்ளன.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர், வேளாண் வணிகப் பிரிவின் தலைமை நிர்வாகி ரஜினிகாந்த் ராய் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் டாக்டர் எல் முருகன் ஆகியோரின் கூற்று கவனிக்கப்பட வேண்டியது.

மீன்பிடித் துறையானது, ஏற்றுமதியுடன் உள்நாட்டுச் சந்தை நுகர்வில் கவனம் செலுத்துவது, அறிவியல் உற்பத்தி முறைகளை வரிசைப்படுத்துவது அவசியம் என மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தெரிவித்தார்.

இத்துறையின் திறனை உணர்ந்து, 2024-2025 ஆம் ஆண்டளவில் மீன் உற்பத்தியை 22 மில்லியன் மெட்ரிக் டன்களாக உயர்த்துவதற்கான தேசிய இலக்கை அரசு உறுதி செய்துள்ளது, இது 28 மில்லியன் மீனவர்கள் மற்றும் மீன் விவசாயிகளுக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து, இந்திய தொழில் கூட்டமைப்பு ஜனவரி 21, 2022 அன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், “இந்தியாவை மீன்வளர்ப்பு மற்றும் மீன்வள முதலீட்டுக்கான மையமாக காண்பித்தல்” என்ற தலைப்பில் அமைச்சர் கூறினார்.

“தற்போது, இந்தியாவின் ஏற்றுமதியில் 74% இறால்; இருப்பினும் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் பங்கு 7% குறைவாக உள்ளது. இதனால், மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதியை அதிகரிக்கவும், மீனவர்களின் விலைப் புள்ளிகளை ஒரே நேரத்தில் அதிகரிக்கவும், அதிக வாய்ப்பு உள்ளது. இதை நோக்கி, விதைகளின் தரம் மற்றும் கிடைக்கும் தன்மை, ஸ்மார்ட் ஃபார்மிங் மற்றும் உணவுப் பாதுகாப்புத் தரங்களை வலுப்படுத்துவதில், இந்தியா கவனம் செலுத்த வேண்டும்,” என்று ஐடிசியின் வேளாண் வணிகப் பிரிவின் தலைமை நிர்வாகி ரஜினிகாந்த் ராய் தெரிவித்தார்.

இந்திய மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்புத் துறை கடந்த 5 ஆண்டுகளில் சராசரி ஆண்டு வளர்ச்சி 7.53% பதிவு செய்துள்ளது. 2019-20 ஆம் ஆண்டில் நாடு ரூ. 46,662 கோடி (6.68 பில்லியன் டாலர்) மதிப்புள்ள 12.89 லட்சம் மெட்ரிக் டன் மீன்வளப் பொருட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது.

"தொழில்நுட்பம் தரிசு நிலங்களை ஈரநிலங்களாக மாற்ற அனுமதிக்கும், இதனால் இலக்கை அடையும் நோக்கில் உற்பத்தி அதிகரிக்கும்; மேலும் கடற்பாசி வளர்ப்பு போன்ற அதிக தேவையுள்ள பிரிவுகளில் முதலீட்டுக்கான புதிய வழிகளைத் திறக்கும், ”என்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் டாக்டர் எல் முருகன் கூறினார்.

மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு உள்கட்டமைப்பு, மேம்பாட்டு நிதி (FIDF) ரூ.7,522.48 கோடியில் கடல் மற்றும் உள்நாட்டு மீன்வளத் துறைகளில் மீன்பிடி உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி மீன் உற்பத்தியை பெருக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (PMMSY) ரூ. 20,050 கோடி ஒதுக்கீட்டில் தொடங்கப்பட்டது, இது மீன்வளத் துறைக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச முதலீட்டாகும். PMMSY 2020-21 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரையிலான 5 ஆண்டுகளில் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களிலும் செயல்படுத்தப்படும். ஜனவரி 2022 நிலவரப்படி, ரூ. 5,234 கோடி மதிப்பிலான திட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன, இதனால் சுமார் 16 மில்லியன் பயனாளிகள் பயனடைந்துள்ளனர்.

மேலும் படிக்க:

கொரோனாவுடன் அதிகரிக்கும் தங்கம் விலை, இன்றைய விலை என்ன?

முருங்கை சாகுபடிக்கு டிப்ஸ்: மாநில அரசின் மானியம் என்ன?

English Summary: Status of Fisheries, Accelerated Fish Farming
Published on: 22 January 2022, 12:56 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now