மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 November, 2018 4:46 PM IST
  • கொட்டில்கள் சரியான காற்றோட்ட வசதியோடு அமைக்க வேண்டும்.
  • சூரிய ஒலி நேரிடையாக படாத வண்ணம் வெப்பத்தில் இருந்து பாதுகாக்கும் வகையிலும் கொட்டில்களில் மேற்கூரைகளை அமைக்க வேண்டும்.
  • கொட்டிகளின் கூரைகளை வெண்மை நிற வண்ணப்பூச்சி செய்தல் மூலம் வெளிப்புற வெப்பம், உள்ளே வராமல் தடுக்கலாம்.
  • அதிகமான வெப்பம் நிலவும் நேரங்களில் கொட்டில்களின் உள்ளே மின்விசிறி, தண்ணீர்த் தெளிப்பான் ஆகியவற்றை உபயோகிக்கலாம்.
  • கால்நடைகளுக்கு எல்லா நேரங்களிலும் சுத்தமான மற்றும் குளிர்ந்தநீர் ஆகியவை கிடைக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு ஏற்படுமானால் அடர் தீவனங்களின் அளவை உயர்த்திக் கால்நடைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • கனிம மற்றும் ஊட்டச்சத்து ஆகிய துணை உணவுகளை அடர் தீவனங்களுடன் சேர்த்து அளித்தல் வேண்டும்.
  • கொட்டில்களின் தரைகள் தரமாகவும் தண்ணீர் வடியக் கூடிய நிலையிலும் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • அதிக வெப்பம் மற்றும் ஈரப்பதம் நிலவும் பருவங்களில் கால்நடைகளை நோய் அறிகுறிகளுக்காக அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.
  • நோய் அறிகுறி தென்படும் கால்நடைகளை உடனடியாக பிரித்துக் கால்நடை மருத்துவரின் ஆலோசனையின்படி அவற்றைப்  பராமரிக்கலாம்.
  • நோய் அறிகுறி தென்பட்ட கொட்டிலை உடனடியாக கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.
  • தினந்தோறும் கொட்டில்களைச் சுத்தப்படுத்தியபின் கிருமி நாசினி கரைசலைத் தெளித்தல் மூலம் நோய்த் தொற்றுகள் பரவாமல் தவிர்க்கலாம்.
  • கொட்டில்களில் முறையான சுகாதாரம் மற்றும் கால்நடை மருத்துவர் அறிவுரைப்படி உயிர்ப் பாதுகாப்பு முறைகளைச் சரியாகக் கடைப்பிடித்தல் வேண்டும்.
  • கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் உரிய நேரத்தில் ஒட்டுண்ணிகளுக்கான பரிசோதனை மற்றும் குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும்.

காலத்திற்கேற்ற தடுப்பூசி அட்டவணை

 அரசால் பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசி அட்டவணையின் படி, கால்நடைகளுக்குத் தடுப்பூசி அளிக்க வேண்டும்.

  • ஜனவரி – பிப்ரவரி கோமாரி நோய்
  • மார்ச் - ஏப்ரல்  ப்ருசெல்லோசிஸ் (அ) கருச்சிதைவுநோய்
  • ஜூன் - ஜூலை கோமாரிநோய்
  • ஆகஸ்ட் - செப்டம்பர் (மழைக்காலத்திற்கு முன்பாக) சப்பைநோய்
  • செப்டம்பர் -அக்டோபர் தொண்டை அடைப்பான்
  • பண்ணையில் இறக்கும் மாடுகளைக் கால்நடை மருத்துவரின் பரிசோதனைக்குப் பிறகே, முறையாக அப்புறப்படுத்த வேண்டும்.
  • வெளியாடுகளுக்குப் பண்ணையின் உள்ளே அனுமதி மறுத்தலின் மூலம் புதிய நோய்கள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

 

English Summary: Summer livestock management and vaccination systems
Published on: 13 November 2018, 04:07 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now