மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 2 February, 2021 3:16 PM IST
Credit : Vivasayam

வெளிப்புற மற்றும் சாலையோர உணவுகளை எளிதில் உட்கொள்ளும் கோழிகளைத் தாக்கும் கோழிக்கழிச்சல் நோயைத் தடுக்க வாரத்தோறும் தடுப்பூசிகள் போட்டப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தடுப்பூசிகள் கால்நடை மருந்தகங்களில் போடப்படும் என்றும அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மெகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில், பெண்களின் வாழ்வாதாரமாக நாட்டுக்கோழி வளர்ப்பு உள்ளது. கோழி வளர்ப்பு மூலம், குடும்பத்திற்கான முட்டை, இறைச்சி தேவைகளை அடைவதோடு, விற்பனை செய்வதால் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர்.

தடுப்பூசி முகாம்

கோழி வளர்ப்பு ஊரகப்பகுதிகளில், உபயோகமற்ற தானிய மிகுதிகளிலும், நிலத்தில் கிடைக்கக்கூடிய அதன் உணவு வகைகள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. கோழிகளை எளிதாக பாதிக்கக்கூடிய நோயாக, கோழிக்கழிச்சல் நோய் உள்ளது. அவற்றை கட்டுப்படுத்த, வாரந்தோறும் சனிக்கிழமை, கால்நடை மருந்தகங்களில் இலவசமாக தடுப்பூசிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கால்நடை மருந்தகங்களில் பெறலாம்

கால்நடை பராமரிப்புத்துறை மூலம், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரியில் கோழி நோய் தடுப்பூசி, இருவார முகாம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு இன்று (நேற்று ) முதல், வரும், 14 வரை, இரு வாரம் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசிப்பணி முகாம், மாவட்டத்தில் நடக்கிறது. முகாம் தங்களது பகுதியில் நடக்கும் தேதியை, அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தில் அறிந்து, கோழிகளுக்கு இலவசமாக கோழி நோய் தடுப்பூசி மருந்தை செலுத்தி பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க...

ராமநாதபுரத்தில் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து அறிய செயல் விளக்க பண்ணை அமைப்பு!

5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!

தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிா்ணயம்!

மீன் சாப்பிட ஆசையா? நோய்களுக்கு இரையாகப்போறீங்க உஷார்!

English Summary: to avoid Chicken Disease, the vaccine will be given at the veterinary dispensary - Namakkal collector announcement!
Published on: 02 February 2021, 03:16 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now