மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 3 April, 2021 7:53 AM IST
Credit : Hindu Tamil

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கால்நடைகளுக்குத் தடுப்பூசிப் போட நடவடிக்கை எடுக்கப்படும் என கால்நடைதுறை இணை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

நோய் தாக்கும் அபாயம் (Risk of disease)

கோடை காலம் கால்நடைகளைப் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. ஏனெனில், கால்நடைகளை முழுமையான மேய்ச்சலுக்கு விட முடியாது என்பதால், தீவனத்தட்டுப்பாடு, உடல் சூடு பிரச்னை என பல பிரச்னைகள் தலைதூக்குவது வழக்கம்.

எனவே நோய்களில் இருந்து, கால்நடைகளைப் பாதுகாப்பதற்காக தடுப்பூசி போட வேண்டியது மிக மிக அவசியம்.

இந்நிலையில், தடுப்பூசி போடுவது குறித்து, காஞ்சிபுரம் மாவட்ட கால்நடை துறை இணை இயக்குனர் நடராஜ்குமார் கூறுகையில்,

தடுப்பூசி (Vaccine)

ஒவ்வொரு பருவகாலத்திற்கும்.அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ப, கால்நடைகளுக்கு நோய்கள் ஏற்படுவது வழக்கம்.

அதைத் தடுக்கும் வகையில், தடுப்பூசி போடநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பூச்சிகள் (Insects)

குளம், குட்டைகளில் தேங்கும் தண்ணீரில் பூச்சிகள் இருக்கும். அந்த தண்ணீரை கால்நடைகள் குடிக்கும்போது, அதன் வயிற்றில் பூச்சிகள் வளரும்.

அதேபோல், ஆடுகள் பற்களை உண்ணும் போது, அதில் உள்ள கிருமிகளால் துள்ளுமாரி நோய் ஏற்படும்.

எந்த பகுதிகளில், கால்நடைகளுக்கு அதிக நோய் தாக்கம் இருக்கும் என்பது கண்டறியப்பட்டு, அதற்கு தகுந்த தடுப்பூசி போடப்படும் இப்பணி தேர்தலுக்குப் பின் துவங்கும்.

400 பயனாளிகள் (400 beneficiaries)

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில், நடப்பாண்டு விலையில்லா பசு மாடுகள், 400 பயனாளிகளுக்கு வழங்கப் பட்டுள்ளன.

ஆடுகள், 6.898 பயனாளிகளுக்கும், புறக்கடை கோழிக்குஞ்சுகள், 5.200 பேருக்கும் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுக்குத் தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

அரசின் இலவச வெள்ளாடு திட்டம்! விண்ணப்பிப்பது எப்படி? முழு விபரம் உள்ளே!

பால் பண்ணையில் கூடுதல் லாபம் பெற வேண்டுமா?

கன்று ஈன்ற மாடுகளைப் பராமரிக்கும் வழிமுறைகள்!

English Summary: Vaccination of cattle after the Assembly elections!
Published on: 03 April 2021, 07:47 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now