மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 16 September, 2020 7:36 AM IST

கோழிகளைத் தாக்கும் நோய்களில் ஒன்றான அம்மை நோயை, இயற்கை மருத்துவம் மூலம் எளிதில் குணப்படுத்த முடியும்.

அறிகுறிகள் (Symptoms)

  • பாதிக்கப்பட்ட கோழி உடல் சோர்ந்து காணப்படும்.

  • கொண்டை, கண் இமை, செவி மடல், கால் மற்றும் நாசிப்பகுதிகளில் கொப்பளங்கள் உருவாகும்.

  • வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் புண்கள் ஏற்படுதல்.

  • முட்டை உற்பத்தி 25% வரைக் குறையும்.

  • முற்றிய நிலையில் தீவனம் உண்ணாமல் இறந்துவிடும் நிலையும் ஏற்படலாம்.

அம்மை நோய் மருத்துவம் (Measles medicine)

தேவையான பொருட்கள்

வேப்பங்கொழுந்து      -1 கைப்பிடி
விரலி மஞ்சள்             - 2 கைப்பிடி

இவை இரண்டையும் நன்கு அரைத்து அதன் சாற்றை எடுத்து பிழிந்து, 1 முதல் 4 சொட்டுகள் வரை, கோழிகளுக்கு வாய் வழியாகக் கொடுக்கவும்.அரைத்த விழுதை வேப்ப எண்ணையில் கலந்து கொப்பளங்கள் மீது தடவவேண்டும்.

வேப்ப இலை மற்றும் வேப்பக் குச்சிகளைப் போட்டு ஊறவைத்த தண்ணீரையேக் குடிக்க கொடுக்க வேண்டும். பண்ணை முழுவதும் தெளிக்க வேண்டும்.

Credit : You tube

கோழி அம்மை மருந்து (வாய்வழிகொடுப்பது)

(10 கோழிகளுக்கு)

தேவையானப் பொருட்கள்

சீரகம்         - 10 கிராம்
மிளகு         - 5 எண்ணிக்கை
மஞ்சள்       - 5 கிராம்
வேப்பிலை  - 10 இலைகள்
துளசி          - 10 இலைகள்
பூண்டு        - 5 பல்

இவற்றை அரைத்து அரிசிக் குருணையில் கலந்துகொடுக்கவும். அல்லது சிறு உருண்டைகளாகக் கொடுக்கவும்.

10 கோழிகளுக்கு வெளிப்பூச்சுக்கு

தேவையானப் பொருட்கள்

சீரகம்            - 20 கிராம்
மஞ்சள்          - 10 கிராம்
வேப்பிலை    - 50 கிராம்
துளசி            - 50 கிராம்
பூண்டு           - 10 பல்
சூடம்             - 5 கிராம்

விளக்கெண்ணைய் அல்லது வேப்ப எண்ணைய் - 100 மில்லி லிட்டர்
அரைத்த விழுதை எண்ணையில் கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி வர அம்மை நோய் விரைவில் குணமடையும்.

மேலும் படிக்க...

செடியில் புழுத்தாக்குதலைக் புரட்டிப்போடும் இஞ்சி-பூண்டு- மிளகாய்க் கரைசல்!

பட்டுப் புழு வளர்ப்பை அதிகரிக்க மத்திய அரசின் திட்டம் - தேனி விவசாயிகளுக்கு வாய்ப்பு

English Summary: Ways to protect chickens from measles - How to prepare in a natural way?
Published on: 16 September 2020, 07:25 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now