மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 9 January, 2021 6:21 PM IST
Credit Samayam

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்சி சமயபுரம் ஆட்டுச் சந்தையில் (sheep market) விற்பனை களைகட்டியது. ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இன்று வியாபாரம் நடைபெற்றுள்ளதாக வியாபாரிகள் (Merchants) தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம், சமயபுரம் பேரூராட்சிக்கு சொந்தமான 5 ஏக்கர் பரப்பளவில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள இடத்தில், பிரதி வாரம் சனிக்கிழமை ஆடுகள் விற்பனைக்கு, வாரச் சந்தை நடைபெற்று வருகிறது.

ஆட்டுச்சந்தை:

இந்த வாரச் சந்தைக்கு திருச்சி மட்டுமில்லாது துறையூர், முசிறி, மண்ணச்சநல்லூர், லால்குடி, வெளி மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பல்வேறு வகை ஆடுகள் விற்பனை (Sales) செய்யப்பட்டன. இவற்றை வாங்குவதற்காக திருச்சி மட்டுமின்றி அண்டை மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகளும் சமயபுரம் சந்தையில் வழக்கம்போல் குவிந்திருந்தனர்.

அதிகளவில் விற்பனை

தமிழர் திருநாளான பொங்கல் விழா விரைவில் கொண்டாடப்பட உள்ளதையொட்டி, சமயபுரம் வாரச் சந்தையில் இன்று வழக்கத்தினை விட அதிகளவில் வர்த்தகம் (Trade) நடைபெற்றது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்த நிலையில் , ஆடுகளை வாங்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வியபாரிகள், பொதுமக்கள் சந்தையில் கூடினர். கொரோனா (Corona) காலகட்டம் என்பதால் ஆடுகள் வரத்து குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்த எதிர்ப்பார்ப்புக்கு மாறாக, அதிகளவில் ஆடுகள் விற்பனைக்கு (Sheep sales) வந்ததால், சமயபுரம் சந்தையில் கடந்தாண்டு பொங்கல் விழாவிற்கு நடந்த வியாபாரத்தைவிட நிகழாண்டில் ஒரு கோடி (1 Corre) ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெற்றது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வெள்ளாடுகளில் மடி நோயைத் தடுக்க கால்நடை மருத்துவர் அறிவுரை!

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு முதல் முறையாக காப்பீடு!

பிப்ரவரி மாதத்தில் நாட்டு பசுக்களின் நலன் சார்ந்த அறிவியல் தொடர்பாக ஆன்லைன் தேர்வு!

English Summary: Weeded sheep market in Trichy! How much is the total sales?
Published on: 09 January 2021, 06:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now