மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 28 June, 2020 3:28 PM IST

கோடைக்காலத்தில் பொதுவாகவே கால்நடைகளுக்கு உயர்ந்த வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தின் ஒருங்கிணைந்த விளைவு காரணமாக உடலின் உடற் செயலியல் மாற்றம் ஏற்பட்டு வெப்ப அயர்ச்சி ஏற்படுகிறது.

குறிப்பாக, ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதங்களில் வெப்ப அயர்ச்சியினால் கால்நடைகளில் உற்பத்தி திறன் மற்றும் செயல் திறன் வெகுவாக பாதிப்பு ஏற்பட்டு கால்நடைகளின் பொதுச் சுகாதாரம் மட்டுமல்லாமல் வேளாண் பெருமக்களின் பொருளாதாரமும் பாதிக்கப்படுகிறது.


கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகள்

  • உஷ்ணம் காரணமாக கால்நடைகளில் இனப்பெருக்க திறன் பாதிக்கப்படும்

  • ஆடு மாடுகளில் பால் சுரக்கும் உற்பத்தித் திறன் பாதிக்கப்படும்

  • உட்புறசெயலியல் மாற்றம் ஏற்பட்டு செயல் திறன் வெகுவாக பாதிக்கப்படும்

  • வளர்சிதை மாற்ற நோய்களின் தாக்கத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்

  • கால்நடைகளில் நோய் எதிர்ப்புத் திறன் பாதிக்கப்படும்.


தீவன பராமரிப்பு மற்றும் பொது மேலாண்மை யுக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளுக்கு ஏற்படும் வெப்ப அயர்ச்சியிலிருந்து பாதுகாக்க முடியும், மேலும் தீவன உட்கொள்ளும் திறன் மற்றும் நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்த முடியும்

கால்நடை பராமரிப்பு முறைகள்

  • பசுந்தீவனம் மற்றும் 35 சதவிகிதம் புரதச்சத்து நிறைந்த சமச்சீர் தீவனத்தினை காலை மற்றும் மாலை நேரங்களில் அளிக்கலாம்

  • பொட்டாசியம் நிறைந்த தாது உப்புகள் அளிப்பதன் மூலம் கறவை மாடுகளில் பால் உற்பத்தி மற்றும் இனப்பெருக்க திறனையும் மேம்படுத்த முடியும்

  • வெயில் காலங்களில், ஒரு நாளில் 5-6 முறை சுத்தமான மற்றும் குளிர்ந்த நீரை வழங்கலாம்

  • குறைந்தபட்சம் 9 அடி உயரமுள்ள கொட்டகை அமைத்து கொட்டகையைச் சுற்றி தீவன மரங்களை வைக்கலாம்

  • 20% துளையிடும் வேளாண் வலைகளும் பயன்படுத்தலாம்

  • 10 முதல் 30 நிமிடங்கள் இடைவெளியில் 1 முதல் 5 நிமிடங்கள் வரை கால்நடைகளின் உடலில் நேரடியாகத் தண்ணீரை தெளிப்பதன் மூலம் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க முடியும்

  • காற்றோட்டமான கொட்டகைகளிலோ அல்லது பயனுள்ள மற்றும் ஆதாரம் தரும் மரங்களின் நிழல்களில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளைப் பராமரிக்கலாம்

  • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதை தவிர்க்கவும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும்

  • அடர்தீவனங்களை 20-30 நிமிடங்கள் சம அளவு தண்ணீரில் ஊறவைத்து அளிக்க வேண்டும

  • வெயில் காலங்களில் மேய்ச்சல் நிலங்களில் ஒட்டுண்ணி அதிகரித்து கால்நடைகளில் உண்ணிக் காய்ச்சல் ஏற்படுத்தும். எனவே , உண்ணி நீக்க மருந்தினை பயன்படுத்தி உண்ணி தாக்கத்தில் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்

  • வெப்ப அயர்ச்சியினால் வளர்சிதை மாற்ற நோய்கள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதால் தாது உப்புகள் மற்றும் சினை மாடுகளில் சிறந்த தீவன மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேண்டும்

மருத்துவர் இரா. சங்கமேஸ்வரன் .
உதவிப் பேராசிரியர்,
கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திருநெல்வேலி

 

மேலும் படிக்க...
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் பரப்பளவு தனியாருக்கு கொடுக்கப்பட்டதா?
கால்நடை வளர்பவர்களும் கடன் அட்டை பெறலாம்..!

English Summary: What are the Summer care methods should take for livestock veterinarian explains
Published on: 11 June 2020, 08:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now