மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 27 October, 2021 4:15 PM IST
Why the sudden rise in egg prices? 30 percent price increase, may rise further!

காய்கறிகளை அடுத்து தற்போது முட்டை விலை உயர்ந்துள்ளது. குளிர் காலம் துவங்கியவுடன் கோழி மற்றும் முட்டைக்கான தேவை அடிக்கடி அதிகரித்து வருவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த ஆண்டும் அதுதான் நடந்துள்ளது. கோழிக்கறி உண்பவர்களின் தேவை சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

டெல்லி சில்லறை சந்தையில் முட்டையின் விலை ரூ. 7 அதே சமயம் சில்லரை விற்பனையில் கோழிக்கறி கிலோ ரூ. 250 ஆக உள்ளது. பருவநிலை மாற்றத்தால், கோழி மற்றும் முட்டைக்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், கனமழை காரணமாக கோழிகள் இறந்துள்ளன. எனவே, வரும் நாட்களில் விலை மேலும் உயர வாய்ப்புள்ளது.

ஏன் திடீர் விலை உயர்வு

இதனால் விவசாயிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். அதனால் மொத்த சந்தையில் கோழிக்கறி விலை கிலோ ரூ. 160 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், மொத்த சந்தையில் தற்போது 4 ரூபாய் முதல் 5 ரூபாய் வரை உள்ள முட்டை விலையும் உயர்ந்துள்ளது. இருப்பினும், வரும் நாட்களில், இதன் விலை சில்லறை விற்பனையில், 8 ரூபாய்க்கு மேல் உயரலாம்.

தில்லி காஜிபூர் முர்கமண்டியில் புதன்கிழமை ஒரு கிலோ ரூ. 150 ஆக இருந்தது. அதே நேரத்தில், சாதாரண வாங்குபவரை சென்றடையும் விலை ஒரு கிலோ 200 முதல் 250 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பரேலியில் கோழிப்பண்ணை மற்றும் வியாபாரம் செய்யும் நஜீப் மாலிக் கூறியதாவது: நவராத்திரி முடிந்த பிறகு கோழிக்கறி விலை உயர்ந்துள்ளது. வரும் நாட்களில் இது 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கலாம்.

ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகளுக்கு பிரச்சனை அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், சோயாபீன் மற்றும் மக்காச்சோளத்தின் விலை உயர்வால், தற்போது கோழி வளர்ப்பு செய்யும் விவசாயிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

உத்திரபிரதேச கோழி பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் நவாப் அலி கூறியதாவது: பல மாதங்களாக சிரமப்பட்டு வந்த விவசாயிகளுக்கு ஓரளவு நிவாரணம் கிடைத்துள்ளது. இந்த மாதத்திலும் கோழிக்கறி மற்றும் முட்டைக்கான தேவை சுமார் 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இந்த முறை கொரோனா காரணமாக தேவை நீடித்தது, கொரோனா ஏற்கனவே நாட்டின் லட்சக்கணக்கான கோழி விவசாயிகளை அழித்துவிட்டது என்று கூறினார்.

மழை சேதம்

நஜீப் மாலிக் கூறுகையில், நான்கைந்து நாட்களாக பெய்த மழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கோழிகளின் குஞ்சுகள் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளன. வரும் நாட்களில் கோழிக்கறி விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

முட்டை விலை அதிகளவில் உயராததால், கடந்த ஒரு மாதமாக, விவசாயிகள், குளிர்பதன கிடங்குகளில் முட்டைகளை வைத்திருப்பதால், ஒரு முட்டையின் விலை, 7 முதல், 8 ரூபாயாக உள்ளது.மொத்த சந்தையில், 100 முட்டையின் விலை,  ரூ. 420 முதல் 450 ஆக உள்ளது.

நாட்டு கோழியின் விலை கிலோ ரூ. 360 ஆகும். இதன் விலை கிலோ ரூ. 450க்கு மேல் இருக்கும். தேசிய முட்டை கார்ப்பரேஷன் கமிட்டியின் அறிக்கையின்படி, செப்டம்பர் மாதத்தில் முட்டை விலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. அறிக்கையின்படி, மும்பையில் முட்டைக்கான அதிக தேவை உள்ளது, அங்கு 100 முட்டைகளின் விலை மொத்தமாக ரூ. 500 ஆக உள்ளது.

வாரணாசியில் இந்த மாதத்தில்  ரூ.500 முதல் 600 ஆக விலை உயர்ந்துள்ளது. லக்னோவில் நூற்றுக்கு 500 ஆகா உள்ளது.

மேலும் படிக்க:

Egg Shells Benefits: நன்மைகளைத் தரும் முட்டை ஓடுகள்

English Summary: Why the sudden rise in egg prices? 30 percent price increase, may rise further!
Published on: 27 October 2021, 04:15 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now