Blogs

Wednesday, 12 October 2022 07:54 AM , by: R. Balakrishnan

Gold Loan

தங்கம் என்பது வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல; அதுவொரு சிறந்த முதலீட்டுப் பொருளாகும். நிறையப் பேர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதுவொரு மதிப்பு மிக்க பொருளாகும். இதுமட்டுமல்லாமல் ஆபத்து காலங்களிலோ அல்லது நிதி நெருக்கடி சமயத்திலோ தங்கத்தை வைத்து கடன் வாங்கவும் முடியும். நிறையப் பேர் தங்கத்தை வைத்து நிறைய விஷயங்களுக்கு கடன் வாங்குகின்றனர். ஆனால் உண்மையில் இந்த 5 முக்கியமான விஷயங்களுக்கு தங்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தொழில் விரிவாக்கம்

உங்களுடைய தொழில் விரிவாக்கத்துக்கு தங்கம் பெரிதும் உதவியாக இருக்கும். உங்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், தொழில் நிறுவனங்களைத் தொடர்ந்து இயங்கச் செய்யவும், செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், நீங்கள் நகையை வைத்து கடன் வாங்கலாம். தங்கத்தை வைத்து நீங்கள் வாங்கும் கடனுக்கான வட்டியும் குறைவுதான்.

கல்வித் தேவைகள்

கல்வி என்பது அனைவருக்கும் மிக முக்கியமான ஒன்று. கல்வியே மிகப் பெரிய செல்வம். உங்களுக்கோ அல்லது எதிர்காலத்தில் உங்களுடைய குழந்தைகளுக்கோ உயர் கல்வி பயில்வதற்கும் கல்வி தொடர்பான மற்ற தேவைகளுக்கும் நகைக் கடன் உதவியாக இருக்கும். கல்விக் கடன் வாங்குவதை விட கையில் இருக்கும் நகையை வைத்து வங்கிகளில் நகைக் கடன் வாங்கலாம்.

சுகாதாரம்

நிறையப் பேர் இன்சூரன்ஸ் செய்திருப்பார்கள். இது ஆபத்துக் காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் இதன் மூலம் கிடைக்கும் உதவி தாமதம் ஆகும் பட்சத்தில் கையில் இருக்கும் நகை பெரும் உதவியாக இருக்கும். உடல் நலக் குறைபாடு போன்ற அவசர தேவைகளுக்கு நகையை வைத்து சமாளிக்க முடியும்.

திருமணம்

தங்கம் முக்கியப் பங்கு வகிப்பது திருமணங்களில்தான். திருமணம் என்றாலே நகை போன்ற ஆடம்பரம் சார்ந்த ஒன்றாகவே உள்ளது. வசதியைப் பொறுத்து நகைகளின் இருப்பு இருக்கும். இதுமட்டுமல்லாமல் திருமணச் செலவுகளுக்கு நகையை வைத்தும் சமாளிக்கலாம். வீட்டில் இருக்கும் நகையை வைத்து கடன் வாங்கி அதை வைத்துக் கூட திருமணம் நடத்தலாம்.

சுற்றுலா விடுமுறை

திருமணம் முடிந்து நிறையப் பேர் வெளியூர்களுக்கோ அல்லது வெளிநாடுகளுக்கோ தேனிலவு செல்வார்கள். திருமணம் ஆகாதவர்கள், கல்வி விடுப்பில் இருப்பவர்கள் போன்ற பலர் சுற்றுலா செல்வார்கள். சுற்றுலா செல்வதற்கான செலவுகள் அதிகம். விமானக் கட்டணம், ஹோட்டல் செலவு என நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும். அதற்கு நகையை வைத்து சுற்றுலா செலவுகளைச் சமாளிக்கலாம்.

மேலும் படிக்க

பென்சனர்களுக்கு புதிய வசதி: இனி எல்லாமோ ரொம்ப ஈசி தான்!

ஆதார் கார்டு கையில் இல்லையா? இனிமே இது போதும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)