Blogs

Wednesday, 21 October 2020 09:11 PM , by: Elavarse Sivakumar

இந்திய அஞ்சல் துறையின்கீழ் செயல்பட்டு வரும் மெயில் மோட்டார் சர்வீஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள Skilled Artisan பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Skilled Artisan

துறைவாரியான காலியிடங்கள்

Motor Vehicle Mechanic            - 082

Motor Vehicle Electrician          - 043

Black Smith                            - 024

Tyreman                                 - 025

Painter                                   - 016

Upholsterer                            - 017

Carpenter and Joiner               - 01


தகுதி (Qualification)

  • சம்மந்தப்பட்ட துறைகளில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும் அல்லது குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  • மோட்டார் வாகன பழுதுநீக்குபவர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் (Salary)

மாதம் ரூ.5,200 - 20,200

வயதுவரம்பு (Age Limit)

18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும்  முறை (Selection Process)

Trade Skill Test அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு குறித்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

Name, Father`s Name, Citizenship, Post Applied, Permanent Address for Correspondence, Date of Birth, Age as on 1.7.2018, Technical Qualification, Experience என்ற விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பத்தை தயார் செய்யவும்.

பூர்த்தி செய்து அதனுடன் சுயசான்று செய்யப்பட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, சுயகையொப்பமிடப்பட்ட 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களில் ஒன்றினை விண்ணப்பத்தில் ஓட்டியும், மற்றொன்றை விண்ணப்பத்துடன் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Senior Manager,
Mail Motor Service ,
139, Beleghala Road,
Kolkata - 700 015
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.10.2020

 மேலும் படிக்க..

விவசாயத்தை வர்த்தகமாக செய்ய சிறந்த வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதியத் திட்டம்!

மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு!

குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)