மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 17 April, 2023 2:12 PM IST
Banned pesticide for sale! Farmers demand!!

திருப்பூரில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து தாராளமாக கிடைக்கிறது என்று அதிகாரிகள் இ-காம் தளங்களை குற்றம் சாட்டுகின்றனர். மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட மோனோகுரோட்டோபாஸ் உள்ளிட்ட பல பூச்சிக்கொல்லி மருந்துகள் தனியார் மூலம் விற்பனை செய்யப்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில், டிசம்பர் 12, 2022 அன்று விவசாயத் துறை GO (Ms) 294ஐ வெளியிட்டது. தற்கொலைகளைத் தடுக்க ஆறு பூச்சிக்கொல்லிகளின் விற்பனையைத் தடைசெய்தது. பூச்சிக்கொல்லி சட்டம் 1986 மற்றும் பூச்சிக்கொல்லி விதிகள், 1971 ஆகியவற்றின் கீழ் இவற்றை விற்பனை செய்வதையும் விநியோகிப்பதையும் நிறுத்துமாறு கடைகளுக்கு உத்தரவிடப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க (உடுமலைப்பேட்டை) துணைத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதன், டி.என்.ஐ.இ.யிடம் பேசுகையில், "விவசாயிகளின் பாதுகாப்பு கருதி மோனோகுரோட்டோபாஸ் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில கடைகளில் தொடர்ந்து விற்பனை செய்வதால், தென்னை விவசாயிகள் வெள்ளை ஈ தாக்குதலை தடுக்க பயன்படுத்துகின்றனர். தேங்காயின் அளவை அதிகரிக்க இந்த ரசாயனம் உதவுகிறது.அதிகமாக ரசாயனம் பயன்படுத்தினால் தலைவலி, தலைசுற்றல், மங்கலான பார்வை, நெஞ்சு இறுக்கம், வியர்வை, குமட்டல் போன்றவை ஏற்படும்.ஆனால், ஒரு சில விநியோகஸ்தர்கள் அவற்றை ஆன்லைனில் கொள்முதல் செய்து விநியோகம் செய்கின்றனர் என்று கூறியுள்ளார்.

உடுமலைப்பேட்டையை சேர்ந்த விவசாயி சி.மனோகரன் கூறுகையில்,"" தென்னந்தோப்புகள் அதிகம் உள்ள உடுமலைப்பேட்டை, காங்கேயம், பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளிலும் இந்த ரசாயனம் கிடைக்கிறது. ரசாயனம் 1 லிட்டர் 600-800 ரூபாய்க்கு 1 முதல் 5 லிட்டர் வரை கிடைக்கிறது. அதுமட்டுமின்றி, முழு வளர்ச்சியடைந்த மரத்திற்கு வெறும் 10 மில்லி ரசாயனம் கலந்த நீர் போதுமானது எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய வேளாண்மை இணை இயக்குநர் (திருப்பூர்) மாரியப்பன், "திருப்பூர் மாவட்டத்தில் 208-க்கும் மேற்பட்ட உரங்கள் மற்றும் விதைக் கடைகளில் ஆய்வு செய்து 717 லிட்டர் மோனோகுரோட்டோபாஸ் பறிமுதல் செய்துள்ளோம். கூடிய விரைவில் மீண்டும் சோதனை நடத்தப்படும்" என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள்

  • ப்ரோஃபெனோபோஸ்
  • அசிபேட்
  • ப்ரோஃபெனோபிஸ்ட் சைபர்மெத்ரின்
  • குளோர்பைரிபாஸ்+சைபர்மெத்ரின்
  • குளோர்பைரிபாஸ்

மேலும் படிக்க

விவசாயத்திற்குச் சிறந்த ஏரி! நீர்நிலைகளை காப்பாற்றும் மையம்!

பவானி அணையில் மாசடையும் நீர்! தமிழக விவசாயிகள் கவலை!

English Summary: Banned pesticides for sale! Farmers demand!!
Published on: 17 April 2023, 02:12 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now