Farm Info

Friday, 19 February 2021 07:02 PM , by: Daisy Rose Mary

வர்த்தக பணப்பயிர் விவசாயம் என்பது ஆண்டு முழுவதும் லாபகரமான விவசாய செயல்முறையாகும். சிறுபண்ணை உரிமையாளர்களுக்கும், விவசாய உலகில் புதியவர்களுக்கும் இந்த தகவலின் மூலம் அதிக லாபம் தரும் பயிர்களை விளைவித்து பயனடையலாம்.... வாருங்கள் பார்க்கலாம்..!!

பயிர் தொழில்நுட்பங்கள் ஒரு விவசாயியிடமிருந்து மற்றொருவருக்கு மாறுபடலாம். இடத்திற்கு இடம் மாறுபடலாம். ஆனால் அடிப்படையான விஷயம் எல்லேம் பொதுவானதே. இந்தியாவில் சீசன் வகைப்பாட்டின் அடிப்படையில் பணப்பயிர்கள் ரபி (Rabi), காரீப் (Kharif) மற்றும் ஜைட் (Zaid) பயிர்களாக பிரிக்கப்பட்டுள்ளன.

  • ரபி பயிர்கள் : இவை குளிர்காலத்தில் விதைக்கப்படும் பயிர்கள் - கோதுமை, பார்லி, கடுகு, பட்டாணி போன்றவை.

  • காரீப் பயிர்கள் : இவை பருவமழையின் போது விதைக்கப்படும் பயிர்கள் - அரிசி, ஜோவர், பஜ்ரா, சோயாபீன், கரும்பு, பருப்பு வகைகள்.

  • ஜைட் பயிர்கள் : இவை கோடைகாலத்தின் போது விதைக்கபடும் பயிர்கள் - பூசணி, கசப்பு, தர்பூசணி, வெள்ளரி, கஸ்தூரி உள்ளிட்ட பயிர்கள்.

கொளுத்த லாபம் தரும் வேளாண் தொழில்கள்- விபரம் உள்ளே!

இந்தியாவில் அதிக லாபம் ஈட்டும் பணப்பயிர்கள்

அரிசி - Rice

அரிசி கிட்டத்தட்ட நாடு முழுவதும் விளைவிக்கப்படுகிறது. இந்தியாவில் மிகவும் பிரபலமான பயிர். சீனாவுக்கு அடுத்தபடியாக அரிசி உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இது ஒரு காரீப் பயிர். பெரும்பாலும் தென் மாநிலங்களில். பல்வேறு வகையான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் நெல் பயிரிடப்படுகிறது. நெல் விவசாயத்திற்கு பொருத்தமான வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை இருக்க வேண்டும். மேலும், பல்வேறு சாகுபடி முறைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம். 

கோதுமை - Wheat

கோதுமை இந்தியாவில் மிகவும் இலாபகரமான பணப்பயிர்களில் ஒன்றாகும். இது ஒரு ரபி பயிர், வடக்கு மற்றும் வடமேற்கு இந்தியாவில் மிக முக்கியமான உணவுப் பயிராக பார்க்கப்படுகிறது. மற்ற தானிய பயிர்களுடன் ஒப்பிடுகையில் கோதுமை வளர்ப்பு மிகவும் எளிதானது. கோதுமை பலவிதமான தட்பவெப்ப நிலைகளில் வளர்க்கப்படலாம், ஏனெனில் இது அதிக தகவமைப்புத் தன்மையைக் கொண்டுள்ளது. 3- டிகிரி செல்சியஸ் முதல் 35 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கோதுமை வளர்ப்பதற்கு சாதகமானது, மற்றும் வடிகட்டிய களிமண் மண் சாதகமானது.

சிறு சிறு வேளாண் தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் வாங்க..! 

கடுகு - Mustard

கடுகு வறண்ட மற்றும் குளிர்ந்த காலநிலை பருவங்களில் வளரும் தன்மையுடையது. கடுகு வளர்ப்பதற்கு 10 டிகிரி செல்சியஸ் முதல் 25 டிகிரி செல்சியஸ் வரை பொருத்தமான வெப்பநிலை வரம்பாகும். கடுகு உலகின் மூன்றாவது மிக முக்கியமான எண்ணெய் வித்து வகைகளில் ஒன்றாகும்.

மக்காச்சோளம் - Maize 

மக்காச்சோளம் இந்தியாவில் மிக முக்கியமான பயிராகும். இது முக்கியமாக கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் தென்பகுதிகளில் வளர்க்கப்படுகிறது. இதை 21 டிகிரி செல்சியஸ் முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவும் பகுதிகளில் அதிக விளைச்சல் தரும். 

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் வேண்டுமா? இதோ உங்களுக்கான சிறந்த ஐடியாக்கள்!!

தினை - Millets 

தினை வகை பயிர்களில் ஜோவர், பஜ்ரா போன்ற பயிர்கள் அடங்கும். இவை பெரும்பாலும் அதிக வெப்பநிலை மற்றும் வறண்ட நிலங்களில் வளர்க்கப்படுகின்றன. இவை ஒரு களிமண் வகை மண்ணில் அதிக விளைச்சலை தருகின்றன.

பருத்தி - Cotton 

பருத்தி மிகவும் இலாபகரமான பணப்பயிர்களில் முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. பருத்தி ஒரு காரீஃப் பயிர். இது ஒரு நார் பயிரும் கூட, மேலும் காய்கறி எண்ணெய் தயாரிக்க பருத்தி விதைகள் பயன்படுத்தப்படுகின்றன. பருத்தி விவசாயத்திற்கு 21 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பொருத்தமானதாக இருக்கும்.

கரும்பு, மூங்கில், கற்றாழை, மசாலா, மருத்துவ தாவரங்கள், தேயிலை, பிற மூலிகைகள், போன்ற வேறு சில இலாபகரமான பணப்பயிர்களும் உள்ளன.

வேளாண் துறையில் நல்ல லாபம் ஈட்ட வேண்டுமா? இதோ உங்களுக்கான சுய தொழில் வாய்ப்புகள்! 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)