நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 March, 2023 12:45 PM IST
Free Training on Vegetable Cultivation!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் மற்றும் இரண்டு அமைப்புகளும் இணைந்து காய்கறி தொடர்பான இலவச பயிற்சிகளை விவசாயிகளுக்கு வழங்கியுள்ளது. என்னென்ன காய்கறி குறித்த பயிற்சிகள் நடைபெற்றன முதலான தகவல்களை இப்பகுதி வழங்குகிறது.

தைவானில் உள்ள உலக காய்கறி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் ஈஷா மண் காப்போம் இயக்கம் சார்பில் காய்கறி விவசாயிகளுக்கான இலவச பயிற்சி கோவையில் சென்ற வாரம் நடைபெற்றது. செம்மேட்டில் உள்ள ஈஷா இயற்கை விவசாய பண்ணையில் நடைபெற்ற இப்பயிற்சியில் ரசாயனங்களைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் வழிமுறைகள் குறித்து வேளாண் வல்லுநர்கள் பயிற்சி அளித்துள்ளனர்.

அதிலும் குறிப்பாக, காய்கறி சாகுபடியில் பூச்சி நோய் மேலாண்மை எவ்வாறு செய்வது?, பல பயிர் சாகுபடி மூலம் வருவானத்தை அதிகரிக்கும் வழிமுறைகள் என்னென்ன? என்பவை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அதோடு, பூச்சி கொல்லிகளின் செலவில்லாத விவசாய வழிமுறைகள் குறித்தும், வரப்பு பயிர்களின் பயன்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் புதிய உத்திகள் முதலான பல்வேறு அம்சங்கள் குறித்து இவ்விலவசப் பயிற்சிக் குறித்த நிகழ்வில் விவசாயிகளுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் இயக்குநர்கள், பேராசிரியர்கள், முன்னோடி விவசாயிகள் பங்கேற்று ஆலோசனைகள் வழங்கினர். அதோடு, மண் காப்போம் இயக்கத்தின் பயிற்சியாளர்கள் மாதிரி பண்ணையை விவசாயிகளுக்கு சுற்றி காண்பித்து பல்வேறு விவசாய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கம் அளித்தனர்.

மேலும் படிக்க

கரும்பு டன்னுக்கு ரூ.4,000 உயர்த்தப்படும்! அமைச்சர் தகவல்!!

விவசாயிகளுக்குச் சலுகை! Grains இணையதளத்தில் இன்றே பதிவு செய்யுங்க!!

English Summary: Free Training on Vegetable Cultivation!
Published on: 29 March 2023, 12:19 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now