மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 March, 2021 2:12 PM IST
Credit : Dailythanthi

மயிலாடுதுறையில் நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த 2 லட்சம் நெல் மூட்டைகள் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது

நெல் கொள்முதல் நிலையங்கள் (Paddy Procurement Stations)

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான 25 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன.

சேமிப்பு (Storage)

இந்த கொள்முதல் நிலையங்களில் கடந்த 2 மாதமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் கொள்ளிடம் அருகே உள்ள எருகூர் நவீன அரிசி ஆலை கிடங்குக்கு எடுத்துச் செல்லப் பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் மெத்தனம் (The authorities are complacent

இந்நிலையில் கடந்த 10 நாட்களாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப் பட்டுள்ள நெல் மூட்டைகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் போதிய பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

தார்ப்பாய்கள் இல்லை (No tarpaulins)

நெல் மூட்டைகளை மூடி பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் தார்ப்பாய்கள் இதுவரை கொள்முதல் நிலையங்களுக்கு வழங்காததால் நெல் மூட்டைகள் வெயிலில் காய்வதுடன், மழை வரும்போது நனையும் நிலை ஏற்படுகிறது.

மழையில் சேதம் (Damage in the rain)

ஒரு வாரத்துக்கு முன் பெய்த மழையால் சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் சேதமடைந்தன.

வீணாகும் ஆபத்து (Risk of wastage)

இதனால் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல் மூட்டைகள் எந்த பயனும் இன்றி வீணாகும் நிலை ஏற்படுவதுடன் அரசுக்கும் இழப்பும் ஏற்படும்.

விவசாயிகள் கோரிக்கை (Farmers demand)

எனவே கொள்ளிடம் பகுதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பின்றி அடுக்கி வைக்கப்பட்டுள்ள 2 லட்சத்துக்கு அதிகமான நெல் மூட்டைகளை உடனடியாக எடுத்து செல்லை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க...

இயற்கை விவசாயத்திற்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

இதை செய்தால் போதும்- மாமரப் பூக்கள் அனைத்தும் காய்களாக மாறும்!

ஜீவாமிர்தம் தயாரிப்பது எப்படி?

English Summary: Lakhs of paddy bundles stagnant at direct purchase outlets - risk of wastage!
Published on: 07 March 2021, 01:48 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now