நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 25 March, 2023 1:05 PM IST
Notification of development plans for tribal farmers!

பழங்குடியின சமூகங்களுக்கு சிறந்த வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக, அவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக அரசாங்கம் 20% வழங்கும், அத்துடன் வீட்டுத் தோட்டங்களை உருவாக்குவதற்கு நாற்றுகள் மற்றும் விதைகளை வழங்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

திருச்சியில் பச்சைமலை, திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி, தருமபுரி மாவட்டம் வத்தல்மலை, சித்தேரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாது மலை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, வேளாண்மைத் துறைகளின் அனைத்துத் திட்டங்களும், பழங்குடியினர் நலன், ஊரக வளர்ச்சி, வனம் ஆகியவை ஒருங்கிணைக்கப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, பட்டு வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, சிறு தானிய சாகுபடி போன்ற பல்வேறு துணைத் துறைகளை உள்ளடக்கியது. அதோடு, தோட்டக்கலைத் துறையின் மூலம் லாபகரமான விலையில் விற்பனை செய்வதன் மூலம் அவற்றின் விளைபொருட்களுக்கு மதிப்பு சேர்க்க முயல்கின்றது.

பழங்குடியினச் சமூகங்களுக்குச் சிறந்த வாழ்வாதாரத்தை உறுதி செய்வதற்காக, அவர்களின் ஊட்டச்சத்து பாதுகாப்பிற்காக அரசாங்கம் 20% வழங்கும், அத்துடன் வீட்டுத் தோட்டங்களை உருவாக்குவதற்கு நாற்றுகள் மற்றும் விதைகளை வழங்கும்.

இத்திட்டத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டுமானங்கள், நுண்ணீர் பாசனம், நீர் சொட்டு மோட்டார்கள், நீர் சுமந்து செல்லும் குழாய்கள், பல அடுக்கு தோட்டக்கலை நடவு பொருட்கள், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டங்களின் கீழ் சாகுபடி, நீர் உரிமை பாதுகாப்பு பணிகள் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கான மானியங்கள் ஆகியவை அடங்கும். விவசாய இயந்திரங்களுக்கு மானியம் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என அரசு வலியுறுத்தியுள்ளது.

திருச்சியில், கலெக்டர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ''முதன்முறையாக ஒருங்கிணைந்த அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது என்றும் பச்சமலை ஒரு பின்தங்கிய பகுதி என்பதால், பொருளாதார முன்னேற்றத்திற்கு விரிவான நடவடிக்கைகள் தேவை என்றும் கூறியுள்ளார். இது குறித்து பச்சமலையைச் சேர்ந்த எம்.கம்புசாமி கூறும்போது, “எங்கள் வாழ்வாதாரம் முழுக்க முழுக்க வேளாண் துறை மற்றும் வனத்துறையை நம்பியே உள்ளது எனவும், அரசுத் துறைகளின் உதவியைப் பெற வேண்டுமானால், அதை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நிலம் மழையை நம்பி இருப்பதால், அரசின் உதவியால் மட்டுமே எங்கள் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்த முடியும். இதற்கு பதிலளித்த வேளாண் அதிகாரிகள், சில திட்டங்கள் ஏலகிரி பழங்குடியின விவசாயிகளை இன்னும் சென்றடையவில்லை என்று ஒப்புக்கொண்டனர், ஆனால் திட்டத்தை முறையாக செயல்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர்கள் உறுதியளித்ததிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

அரிய காய்கறிகளை வளர்க்க தனது வேலையினை விட்ட இன்ஜினியர்!

பருத்தி விலை உயரும் என விவசாயிகள் எதிர்பார்ப்பு!

English Summary: Notification of development plans for tribal farmers!
Published on: 25 March 2023, 01:05 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now