மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 4 January, 2021 8:09 AM IST
Credit : ANI

மத்திய அரசின்  வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சாலையோரம் கூடாரங்களை அமைத்தும், டிராக்டர் டிரைலர்கள் மீது தார்பாய் போட்டு மூடி வீடு போன்று மாற்றியும், இரவு நேரங்களில் அதில் தூங்குகின்றனர். பலர் போராட்டக்களத்திலேயே கம்பளி விரித்து தூங்குகின்றனர்.

தன்னார்வலர்கள் உதவி (Volunteers help)

போராட்டத்திற்கு இடையூறு செய்யும் கும்பல் ஒருபுறம் இயங்கி வரும் நிலையில், தன்னார்வலர்கள்  (Volunteers) உணவு, உடைகளை வழங்கி உதவிகளை செய்து வருகின்றனர்.

சிங்கு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உணவு வழங்கி வருகிறார். இதற்காக அவர் போராட்டக்களத்தில் தொடர்ந்து முகாமிட்டுள்ளார்.

அழகிய வேலைப்பாடுகள் (Beautiful carvings)

இந்நிலையில், அவர் தனது லாரியை சொகுசு வீடு போன்று மாற்றி அமைத்து அதில் தங்கியிருக்கிறார். லாரியின் பின்பகுதியில் வாசல் அமைத்துள்ளார். அதில் அழகிய வேலைப்பாடுகளுடன், விவசாயத்தின் தார்ப்பரியத்தை விளக்கும் ஓவியங்களும் வரையப்பட்டுள்ளன.

வாசல் வழியாகக் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தால், சொந்த வீட்டில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. உட்கார சோஃபா(Sofa) , மெத்தை, டிவி(TV), கழிப்பறை (Toilet) என அனைத்து வசதிளும் இடம்பெற்றுள்ளன.

இதுபற்றி அந்த விவசாயி கூறுகையில், போராடும் விவசாயிகளுக்கு உணவு வழங்கும் சேவையை செய்வதற்காக டிசம்பர் 2ம் தேதி இங்கு வந்தேன். எனது அனைத்து வேலைகளையும் விட்டு இங்கு வந்து சிங்கு எல்லையில் விவசாயிகளுக்கு உணவு வழங்கினேன்.

ஒரு வாரத்தில் எனக்கு வீடு மற்றும் குடும்பத்தினரின் நினைவு வந்தது. அதனால் இந்த லாரியை வீடு போன்று மாற்றினேன் என்றார்.

மேலும் படிக்க...

பொங்கலுக்கு வலுசேர்க்கும் மண்பானைகள் - தயாரிப்பு பணிகள் தீவிரம்!

ஆரோக்கியத்தைப் பெற வேண்டுமா? பாரம்பரிய உணவுகளுக்குத் திரும்புங்கள்!

மாதம் ரூ.42 செலுத்தினால் ஆயுள் வரை ஓய்வூதியம்- அடல் பென்சன் யோஜனா திட்டம்!

English Summary: On the battlefield, anything is possible if the farmer thinks of converting the truck into a house!
Published on: 03 January 2021, 08:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now