மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 13 December, 2020 11:04 AM IST
Credit : News Fresherslive

பிரதமரின் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தில், மற்றொரு மாநிலத்திலும், ரூ.2.5 கோடி வரை மோசடி நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

விவசாயிகளுக்கு நிதியுதவி செய்யும் வகையில் பிஎம்-கிசாந் சம்மன் நிதி திட்டத்தை (PM-Kisan Samman Nidhi)மத்திய அரசு 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்தது. குறிப்பாக பயிரிடக்கூடிய நிலங்கள் தங்கள் பெயரில் உள்ள, நலிவடைந்த விவசாயிகள் இந்த நிதி உதவியைப் பெறலாம்.

இந்த பணம் விவசாயிகளுக்கு மூன்று தவணைகளில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு தவணையிலும் விவசாயிகளுக்கு 2000 ரூபாய் கிடைக்கிறது. இதுவரை மோடி அரசு 6 தவணைகளில் விவசாயிகளுக்கு பணம் கொடுத்துள்ளது. 7-வது தவணை டிசம்பர் மாதம் முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில் பிஎம்-கிசான் திட்டத்தில் தமிழகத்தில் முறைகேடு நடந்திருப்பதும், விவசாயிகள் அல்லாதவர்கள் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டு, அவர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டதும் அம்பலமானது. இதுதொடர்பான விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக தற்போது ஹிமாச்சல மாநிலத்திலும், பிஎம்-கிசான் திட்டத்தில் முறைகேடு நடத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த மாநிலத்தின் காங்ரா மாவட்டத்தில் (Kangra District) மொத்தம் 2.5 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதில் உச்சக்கட்ட மோசடி என்னவென்றால், ஓய்வூதியதாரர்கள், வேளாண்துறை ஊழியர்கள், வியாபாரிகள் ஆகியோர் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு, அவர்கள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டிருப்பதுதான்.

இதையடுத்து தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதுடன், பணத்தை திரும்பப்பெறும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த சில மாதங்களாக நாடே கொரோனா அச்சம் மற்றும் நெருக்கடிக்கு ஆளாகியிருந்ததைப் பயன்படுத்திக்கொண்டு இந்த மோசடி அரங்கேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

அடுத்தது ரயில் மறியல்- விவசாய சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!

தினமும் ரூ.121 செலுத்தினால் ரூ.27 லட்சம் தரும் LICயின் கன்னியாதன் பாலிசி!

பயறு வகைகளில் விதை நேர்த்தி! மகசூலை அதிகரிக்கும் வழிகள்!

English Summary: PM-Kisan scam: Rs 2.5 crore scam exposed
Published on: 13 December 2020, 10:54 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now