மா: பிஞ்சு- காய் உதிர்தலை தடுத்து மகசூல் பார்க்க சூப்பர் ஐடியா! சர்க்கரை வள்ளிக்கிழங்கில் மகசூலை பாதியாக குறைக்கும் கூன் வண்டு- கட்டுப்படுத்தும் முறை? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 21 October, 2020 8:13 AM IST

இயற்கை வேளாண்மைக்கு தரச்சான்று, விதைச்சான்று பெற விண்ணப்பிக்கலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

நஞ்சில்லா வேளாண் விளைபொருட்களை விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்டு அங்கக விளைபொருட்களுக்கு அதாவது இயற்கை முறையில் இரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் ரசாயன உரங்கள் இன்றி சில விவசாயிகள் சாகுபடி பணிளை மேற்கொண்டு வருகின்றனர்.

அவ்வாறு விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கு தமிழ்நாடு அரசின் விதை சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் குறைந்த கட்டணத்தில் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது
தற்போது அங்கக விளைபொருட்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட வேளாண் விளைபொருட்களுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் அங்கக விளைபொருட்களுக்கான அங்ககாடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. எனவே நுகர்வோர் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கும் போது அவை உண்மையிலேயே இயற்கை முறை யில் விளைவிக்கப்பட்ட பொருட்களா என்பதற்கான எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை. இச்சூழ்நிலையில் இதற்கான தரச் சான்று என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

அங்ககச் சான்று அவசியம் (Need for Organic Certificate)

இதுகுறித்து திருநெல்வேலி மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் சு.சுரேஷ் கூறுகையில், தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத் துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ், மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அளிக்கப்படுவதால் இந்தச் தரச்சான்றிதழ் மூலம் அங்கக விளை பொருட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.

அங்ககச் சான்றளிப்புக்கு விண்ணப்பிக்க விண்ணப்படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விவரக்குறிப்பு , பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர்த்திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதார் நகல் இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி திருநெல்வேலி விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும்

தற்போது இயற்கை பொருட்களை உற்பத்தி செய்து வரும் விவசாயிகள் தனியாகவோ அல்லது ஒரு குழுவாகவோ தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையில் பதிவு செய்து கொள்ளலாம். கார்ப்பரேட் நிறுவனங்களும் இதில் பதிவு செய்து கொள்ளலாம்

இது குறித்து மேலும் விவரங்கள் அறிந்துகொள்ள திருநெல் வேலி புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள 32 ராஜராஜேஸ்வரி நகர், என் ஜி.ஓ பி காலனியில் இயங்கி வரும் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குநர் அலுவலகத்தை 04622554451 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் இது குறித்த விவரங்களை https://www.tnocd.net என்ற இணைய தளத்திலும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

விவசாயத்தை வர்த்தகமாக செய்ய சிறந்த வாய்ப்பு- இளைஞர்களுக்கான புதியத் திட்டம்!

மீன் வளத்தைப் பெருக்க ரூ.40ஆயிரம் வரை மானியம்- மீன்வளத்துறை அறிவிப்பு!

குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!

English Summary: Seed certification to get quality certification for organic farming, call for certification there!
Published on: 21 October 2020, 08:13 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now