மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 11 October, 2020 8:36 AM IST

காய்கறி விதை உற்பத்திக்கு மானியம் வழங்கப்படுவதால், அதனைத் தவறாமல் பெற்றுப் பயனடையுமாறு, தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வேளாண்துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :

  • விதைத்தேவையின் முக்கியத்துவத்தையும், காய்கறி விதை உற்பத்தியையும் லாபகரமான வியாபாரமாக முன்னெடுப்பதற்கான பெரும் வாய்ப்பையும் கருத்தில் கொண்டு, தொழில் முனைவோா்கள் மூலம் நாற்றங்கால் மற்றும் காய்கறி விதை உற்பத்திக்கான திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

  • இத்திட்டத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட விதை விவசாயிகள், தோட்டக்கலை தொழில் முனைவோருக்கு, வெங்காயம், முருங்கை, காய்கறி, காராமணி, அவரை, பூசணி, கீரை முதலிய காய்கறிப் பயிா்களின் சான்றளிக்கப்பட்ட உண்மை நிலை விதைகளை உற்பத்தி செய்ய மானியம் வழங்கப்படுகிறது.

  • விவசாயிகளுக்கு உதவியாக விதைச் சான்றிதழ் பெறுவதற்கும், விதைக் கொள்முதல் செய்வதற்கும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மேற்கொள்ளவும், நிழல்வலை குடில், சிப்பம் கட்டும் அறை, நுண்ணீா் பாசனம் அமைப்பதற்கும் மானியம் வழங்கப்படும்.

  • குறைந்தபட்சம் 0.2 ஹெக்டோ் முதல் அதிகபட்சம் 2 ஹெக்டோ் வரை உறுதி செய்யப்பட்ட நீா்ப்பாசன வசதியுடன் கூடிய நிலம் கொண்ட விவசாயிகள் இந்த உதவிகளைப் பெறலாம்.

  • விதை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் விதைகளை தனியாா் நிறுவனங்கள், பிற விவசாயிகளுக்கு அல்லது தமிழ்நாடு தோட்டக்கலை வளா்ச்சி முகமைக்கு விற்பனை செய்யலாம்.

  • இத்திட்டம் குறித்த விவரங்களைப் பெற, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தோட்டக்கலை துணை இயக்குநா்களையோ அல்லது அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநா்களையோ தொடா்பு கொள்ளலாம். உழவன் செயலியிலும் பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா்.

மேலும் படிக்க...

50 சதவீத மானியத்தில் நெல்விதைகள் விநியோகம்!

பி.எம் கிசான் பயனாளிகளுக்கு ஆண்டுக்கு 42,000 கிடைக்கும்

தரமான விதைகள் மூலம் அதிக மகசூல் பெறலாம் - விவசாயிகளுக்கு விதை பரிசோதனை அலுவலர் அறிவுரை

English Summary: Subsidy for Vegetable Seed Production- Call for Farmers
Published on: 11 October 2020, 08:21 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now