மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 7 December, 2021 5:53 PM IST
Solar Power Plants

வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் (Solar Panels) அமைக்க, மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க மின் துறை 40 சதவீதம் மானியம் (40% Subsidy) வழங்குகிறது. அத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர், தமிழக மின்வாரிய இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

சூரியசக்தி மின் நிலையங்கள் (Solar Power Plants)

மத்திய அரசு, சுற்றுச்சூழலை பாதிக்காத சூரியசக்தி மின் நிலையங்கள் அமைப்பதை ஊக்குவிக்க, மானியம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. இதனால், தமிழகத்தில் பல நிறுவனங்கள், நிலத்தில் அதிக திறன் உடைய சூரியசக்தி மின் நிலையங்களையும், வீடு, கல்வி நிறுவனங்கள் போன்ற கட்டடங்களில் குறைந்த திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்களையும் அமைத்து வருகின்றன. தற்போது வீடுகளில் சூரியசக்தி மின் நிலையம் அமைக்க, மானியம் வழங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.

மானிய விகிதம் (Subsidy Rate)

அதன்படி, வீடுகளில் 3 கிலோ வாட் வரை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான மொத்த செலவில், 40 சதவீதம் மானியமாக வழங்கப்படும். மேலும், 3 முதல் 10 கி.வாட் வரை அமைக்க, முதல் 3 கி.வாட்டிற்கு 40 சதவீதமும்; 4 முதல் 10 கி.வாட் வரை 20 சதவீதமும் மானியம் கிடைக்கும்.

அடுக்குமாடி குடியிருப்பு, குடியிருப்பு நல சங்கங்கள்,10 கி.வாட் முதல் 100 கி.வாட் வரை மின் நிலையம் அமைக்கலாம். அதற்கு, 20 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இது குறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில், மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்கமின் துறை சார்பில் வழங்கும் மானிய திட்டத்தை செயல்படுத்தும் பணி, மின் வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்தல் (Apply)

அதன் சார்பில், மின் நிலையம் அமைப்பதற்கான ஆலோசனை, பயனாளிக்கு மானியம் பெற்று தருவது உள்ளிட்ட ஒருங்கிணைப்பு பணிகளை, 'டெடா' (Teda) எனப்படும் தமிழக அரசின் எரிசக்தி மேம்பாட்டு முகமை மேற்கொள்ளும்.

மானிய திட்டத்தில் மின் நிலையம் அமைக்க விரும்புவோர், டெடாவின் இணையதளத்திற்கு சென்று, அதில் தெரிவிக்கப்பட்டுள்ள மின் வாரிய இணையதளத்தில் (Electricity Webside) விண்ணப்பிக்க வேண்டும். அந்த தளத்தில் அனைத்து விபரங்களும் இடம் பெற்றுள்ளன.

மேலும் படிக்க

யானை மனித மோதலைத் தடுக்கும் தேனீக்கள்: புதிய திட்டம் அமல்!

இயற்கை முறையிலான மாற்று எரிசக்தி உற்பத்திக்கு மானியம் தேவை!

English Summary: 40% subsidy for setting up solar power plants in homes!
Published on: 07 December 2021, 05:53 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now